அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, December 15, 2011

Rddr786:+2 தேர்வு கால அட்டவணை


தமிழ்நாடு, புதுச்சேரி (பாண்டிச்சேரி) +2 தேர்வு கால அட்டவணைஅறிவிக்கப்பட்டது. விரிவான கால அட்டவணை http://www.pallikalvi.in/Dinamalar, தினகரன் காண முடியும். தேர்வு 8-3-2012 அன்று தொடங்குகிறதுமற்றும் 30-3-2012 அன்று முடிவடைகிறது

Tuesday, December 13, 2011

Rdd786:சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில் மாற்றம் இனிமேல் விருப்பப்பாடத்தின் மூலம் சமாளிக்க முடியாது

விருப்பப் பாடத்தை கேடயமாக வைத்து, சிவில்சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேறிவிட முடியாது. கடினமான திறனறி தேர்வுமுறையை முதல்நிலைத் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
இந்தாண்டு முதல்(2011), சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி, ஏற்கனவே மாணவர் சமூகம் அறிந்த ஒன்றுதான். கடந்த 2010ம் ஆண்டுவரை, ஒருவர், பொதுப்பாடத்திலும், விருப்பப் பாடத்திலும் தேர்ச்சிப்பெற வேண்டும். புதிய விதிமுறையின்படி, முதல்நிலைத் தேர்வானது(Preliminary exam), 2 தாள்களைக் கொண்டதாக இருக்கிறது மற்றும் ஒவ்வொரு தாளுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தாள்களிலும் அதிகபட்ச மதிப்பெண்கள் 200.

Sunday, November 27, 2011

Rddr786:எய்யலூரில் மனு நீதி நாள் முகாம் : முருகுமாறன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார் கோவில் அடுத்த எய்யலூரில் நடந்த மனு நீதி நாள் முகாமில் எம்.எல்.ஏ., முருகுமாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த எய்யலூரில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமை தாங்கினார். தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றிய தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., முருகுமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவி வழங்கினார். அதில் 4 குடும்ப அட்டைகள், 3 மனை பட்டா மாற்றம், 4 பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது. டாக்டர் சிவானந்தம் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கூட்டுறவு துறை சார் பதிவாளர் ராதாகிருஷ்ணன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டம் குறித்தும் பேசினார். போக்குவரத்துத் துறை, நில அளவை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று தங்கள் துறை ரீதியாக மக்களுக்கு விளக்கம் அளித்தனர். முகாமில் 250 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் எய்யலூர் கீழத்தெருவில் சிமெண்ட் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்குவதாக எம்.எல்.ஏ., முருகுமாறன் உறுதியளித்தார். வருவாய் ஆய்வாளர் ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் பலர் பங்கேற்றனர். மேலும் இப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டமும் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி நன்றி கூறினார். தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் முதல் முறையாக 12 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தர வினை எம்.எல்.ஏ., முரு குமாறன் வழங்கினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=356704

Rddr786பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் : இனி முன் அனுமதி தேவையில்லை

சென்னை : ""பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு, முன் அனுமதியின்றி நேரில் விண்ணப்பிக்கலாம்,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், கூடுதல் பக்கங்கள் சேர்ப்பு போன்ற பணிகள், ஒருவரின் பாஸ்போர்ட்டிலேயே செய்யப்பட்டு வந்தன. தற்போது, தனியார் பங்களிப்புடன் கூடிய புதிய பாஸ்போர்ட் வழங்கும் முறையில், இம்மாற்றங்களை செய்ய விரும்புவோர், புதிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இவ்விண்ணப்பங்களை சமர்பிக்க, நீண்ட காத்திருப்பிற்கு பின் தான், ஆன் - லைனில் அனுமதி கிடைத்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை, முன் அனுமதி பெறாமல், தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில் நேரில் சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை, http://www.passportindia.gov.in/என்ற இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பதாரர்கள், ஆன் - லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், விண்ணப்ப குறிப்பு எண்(ஏ.ஆர்.என்.,) மற்றும் தேவையான அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில், வேலை நாட்களில் காலை 10 முதல், 1 மணி வரை, இவ்வசதியை பெறலாம்.

Monday, October 10, 2011

பாஸ்போர்ட்விண்ணப்பிக்க புதிய நடைமுறை

ஆன்லைன்  மூலம் விண்ணப்பதாரர்கள் சந்தோஷப்படுத்த பாஸ்போர்ட் சேவா திட்டம்
(Passport Seva Project)  16.09.2011  முதல் மூன்று இடங்களில் தொடங்கி உள்ளது.அதாவது கிழ் குற்ப்பிட்டுள்ள முகவரிகளில்    
1. Passport Seva Kendra .
Ground & First Floor, No.1,
Bhanumathi Ramakrishna Road,
Saligramam, (Vadapalani)
Chennai – 600 093.     
2. Passport Seva Kendra ,
First Floor, Navins Presidium, No.103,
Nelson Manickam Road,Aminjikarai, Chennai – 600 029.

Thursday, September 29, 2011

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ”(Trimester pattern) ” - அரசு உத்தரவு!

2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது...

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு,
நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-
தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.
அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.
55 முதல் 60 மார்க் வரை – ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)
49 முதல் 54 வரை – ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)
43 முதல் 48 வரை – பி 1 கிரேடு (பாயிண்ட் 8)
37 முதல் 42 வரை – பி 2 கிரேடு (பாயிண்ட் 7)
31 முதல் 36 வரை – சி 1 கிரேடு (பாயிண்ட் 6)
25 முதல் 30 வரை – சி 2 கிரேடு (பாயிண்ட் 5)
19 முதல் 24 வரை – டி கிரேடு (பாயிண்ட் 4)
13 முதல் 18 வரை – இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)
12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் – இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.
நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ் தமிழ் & கொள்ளுமேடுXpress

Friday, September 16, 2011

Rddr786: வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை

சென்னை:"அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்' என, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., றிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில், 65 லட்சம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல்., கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன், "ப்ரீபெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, அறிமுகமில்லாத மொபைல் எண்களிலிருந்து சர்வதேச அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன."மிஸ்டு கால்' மற்றும் அழைப்புகளாக வரும், "இந்த சர்வதேச அழைப்புகளால், தங்கள் ப்ரீபெய்டு கணக்கில் உள்ள கையிருப்பு தொகை 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை குறைந்து விடுகிறது' என, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் பி.எஸ்.என்.எல்.,க்கு வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து, "வாடிக்கையாளர்கள், "+00239' என்ற எண் மற்றும் அறிமுகமில்லாத சர்வதேச எண்ணிலிருந்து வரும் அழைப்புகள், "மிஸ்டு கால்'களுக்கு பதிலளிக்க வேண்டாம்' என, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறும்போது, "சர்வதேச அழைப்பால், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன், "ப்ரீபெய்டு' வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள கையிருப்புத் தொகை குறைந்து விடுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த பிரச்னையை தவிர்க்க, சர்வதேச எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் பதிலளிக்கும் வசதியை தடை செய்துள்ளோம். இது குறித்து, வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தெரிவித்து வருகிறோம்' என்றார். ஏற்கனவே, இது போன்ற சர்வதேச அழைப்புகள் குறித்து ஏராளமான புகார்கள் பி.எஸ்.என்.எல்.,க்கு வந்துள்ளன. ஆனாலும், அந்த அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதை, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியாதது குறித்து வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Mr.M.AKBAR ALI SON AFRAZ ALI Naming ceremony's Video

Assalamu Alaikum (varah) Mr.M.AKBAR ALI SON AFRAZ ALI Naming ceremony's Video

Ramdan 2011 Celebration @Reddiyur (Video)

(Video)

Saturday, September 10, 2011

வஃபாத் செய்தி: ரெட்டியூர் சோபன் பீவி மறைவு.

அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர் கிழத்தெரு ஜனாப் S. பசிர் & ஜனாப் .S.சலீம் அவர்களின் தயார் சோபன் பீவி இன்று 10.09.2011 மாலை 5 மணியளவில் தத்துவாஞ்சேரி ல் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

Wednesday, August 31, 2011

இரெட்டியூர் வளைகுடா (U.A.E) வாழ் சகோதர்கள் ஈத் பெருநாள் நிகழ்வுகள் (video)

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் நபிகள் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் இன்று ''ஈதுல் ஃபித்ர்'' - நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் எமது உளமார்ந்த நல் வாழ்த்துகள்.

இன்று இறையருளால் 30.9.2011 காலை 6:20 AM மணியளவில் EID HA GROUND @ Dubai ல் நடைபெற்ற ரமலான் பெருநாள் தொழுகை நமதூர் வளைகுடா வாழ் சகதோர்கள் கலந்து கொண்டார்கள் . மாலையில் தமிழ் பசாரில் சந்தித்து சிறப்பித்த அனைவருக்கும் இணையத்தளம் சார்பாக நன்றி கலந்த சலாமை தெர்வித்துகொள்கிறோம் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).



சந்திப்பின் வீடியோ.............





சந்திப்பின் படங்கள்

Wednesday, August 17, 2011

Rddr786:ரெட்டியூர் முகமது பீவி மறைவு.



அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் S. பசிர் அஹமது, ஜனாப் .S. ஹபிப் ரஹ்மான் அவர்களின் தயார்  முகமது  பீவி இன்று 17.08.2011 காலை 10 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

Thursday, August 04, 2011

இஸ்லாமியர்​களுக்கு கூகுள் கொடுத்துள்​ள ரமலான் பரிசு

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது.

இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.



--
36:68 நாம் யாருக்கு வாழ் நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத் திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து நடையை இழந்து படுக்கையில் கிடக்கிறான். குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான். இது தான் இவ்வசனத்தில் (36:68) படைப் பில் இறங்கு முகம் என்று கூறப்படுகிறது.

- பயனுள்ள தகவல்கள்
Thanks: Yahoo Group : http: //groups.yahoo.com/group/K-Tic-group

Tuesday, August 02, 2011

இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றதின் வேண்டுகோள்

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் நபிகள் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நமதூரில் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு நமதூரை சேர்ந்த சகோதரர்களைக் கொண்டு நமதூரில் நற்பணி செய்து வருகிறன்றனர் அல் ஹம்துலில்லாஹ்.!

கடந்த ஆண்டு   ரமலான் போல பள்ளி சிறார்களுக்கு “குர்ஆன்” & '' பயான் " மனனம் போட்டி நடத்தி பரிசு வழங்குதல் மற்றும் பள்ளிவாசலுக்கு மின் அலங்கார விளக்கு அமைத்தல் போன்ற நற்ப்பணியினை இவ்வாண்டும் வெற்றிகரமாக நடத்துவதற்காக நமதூர்  அனைத்து வெளிநாடுவாழ் (அமீரகம் ,சவூதி,மலேசியா,சிங்காப்பூர்,கத்தார் ) பெரியோர்கள்  மற்றும்  சகோதரர்கள் அனைவர்களும் நன்கொடையும் வழங்கி நற்ப்பணி தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
நம் ஒருமித்த ஒத்துழைப்புக்கு வல்ல நாயன் நற்கூலி தந்தருள்வானாக ஆமீன்!


இங்ஙனம்

இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் 
ரெட்டியூர் 

 குறிப்பு: அனைவர்களும்  தொடர்புகொள்ள:
H.ஜாவித்- (00919629929397)
J.ஆசிக் -( 00919585072255)
 A. பாஜ்ருல்லாஹ் -( 00919600141953 )



 

Saturday, July 30, 2011

ஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே !! உஷார்!!!

இப்பபதிவு  ''மதுரை பாண்டி''யின்  மதுரைக்காரன்  என்ற வலைபூவில்  பார்த்தது ! படித்தது !! சுட்டது !!!  உங்களை உஷார் படுத்துவதற்காக இரெட்டியூர் Express -வில்
 
இரண்டு நாளுக்கு முன்பு என் ஈமெயில்-ஐடி க்கு SBI ல இருந்து ஒரு மெயில் வந்துச்சு.. நானும் open பண்ணி பார்த்தேன்... இப்படி இருந்துச்சு அந்த மெயில்..

(படம் பெரிதாக தெரிய படம் மீது கிளிக்கவும்.. )


            பொதுவா பேங்க்-இடம் இருந்து எந்த மெயில் வந்தாலும் அதோட " sender " அட்ரஸ் பார்த்துட்டு தான் மெயில்-அ படிச்சு பார்ப்பேன்.. இதுல " sender " அட்ரஸ் ல
<server-alert@onlinesbi.co.in>  இருந்துச்சு... உண்மைலேயே பேங்க் ல இருந்து தான் அனுப்பி இருக்காங்க போல  நு நினைச்சு அவங்க அனுப்பி இருந்த அந்த " File " அ ஓபன் பண்ணேன்...




            அவங்க சிஸ்டம் ல என்னமோ error வர்றதாகவும் , அதை சரி பண்ண என்னுடைய சுய விவரங்களை ஒண்ணு விடாம குடுத்தா தான் அந்த problem அ சரி பண்ண முடியும் நு போட்டு இருந்துச்சு ... சரி.. நாம தான் ஏதோ தப்பு பண்ணிட்டோம்  போல, அதான் SBI இந்த மாதிரி அனுப்பி  இருக்குனு அவன் குடுத்த link -ah ஓபன் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு அதோட வில்லங்கம் என்னன்னு.. ..

இது தான் அந்த லிங்க்
" http://jonathangosselin.info/wp-theme.php "

SBI க்கும் இந்த லிங்க் அட்ரஸ்க்கும் என்னடா சம்பந்தம் நு ஓபன் பண்ணி பார்த்தேன்..
(Chrome , Firefox இந்த லிங்க் ஓபன் பண்ணும் போதே warning காமிக்குது ) ... நான் ஓபன் பண்ணுனது " IE " ல...

அந்த லிங்க்-அ ஓபன் பண்ணுனா அது இன்னொரு லிங்க்-க்கு redirect ஆச்சு..
"http://amexapparel.com/online/sbi/indexx.html "



அச்சு அசலாக "SBI Bank website " போலவே டிசைன் பண்ணி இருக்குற போலியான வெப்சைட் அது...
இந்த வெப்சைட் ல என்னுடைய  விவரங்களை  குடுத்து இருந்த  என்னுடைய கணக்கில் இருந்து என்னுடைய பணம் களவாடப்பட்டு இருக்கும்..

உண்மையான SBI பேங்க் வெப்சைட்
https://www.onlinesbi .com



உடனடியாக "SBI " கு மெயில் அனுப்பி இந்த விஷயத்தை தெரிவித்தேன்.. அவர்கள் இந்த மாதிரி வர்ற மெயில்-க்கு  respond  பண்ண வேண்டாம் என்று பதில் அனுப்பி இருந்தனர்.. மேலும் சில விவரம் கேட்டு இருந்துந்தாங்க.. அதையும் அனுப்பிட்டேன்...


ஏமாற்ற படுவதை தவிர்க்க வழிகள்..

1 . ஈமெயில் ல வர்ற இந்த மாதிரி link - அ கிளிக் பண்ண கூடாது  ..
2 . பொதுவா பேங்க் சைட் லாம் " https " ல தான் ஆரம்பிக்கும்.. நம்முடைய பெயர் மற்றும் password கொடுப்பதற்கு முன் இதை உறுதி படுத்திகொள்ளணும்  .. 
3 . நாம தான் ரொம்ப உஷாரா இருக்கணும்.. இந்த மாதிரி எந்த சுய விவரம் கேட்குற மாதிரி மெயில் வந்தா, உடனடியா சம்பந்தப்பட்ட பேங்க் -ஐ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்..   
4 . இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தணும்..



எனக்கு சில சந்தேகம் இருக்குது..

1 . நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சு மூணு மாதம் தான் ஆகுது... இதுக்கு முன்னாடி எனக்கு இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல.. நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சது எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுது...
(எனக்கு இன்னும் பல வாங்கி கணக்குகள் ஏற்கனவே இருக்கு.. வேற எந்த "பேங்க்" த இருந்தும் இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல..

2 . "sender " அட்ரஸ் ல எப்படி "server-alert@onlinesbi.co.in> " இந்த மாதிரி அனுப்ப முடிஞ்சுது..


கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், சில நிமிட அஜாக்கிரதையால் தொலைத்து விடாமல் , நாம தான் விழிப்புணர்வாய்  இருக்கணும்  ..

டிஸ்கி:
இந்த லிங்க் அ ஓபன் பண்ணி "http://amexapparel.com/online/sbi/indexx.html " , தப்பும் தவறுமா நம்முடைய விவரங்களை குடுத்தாலும் அமைதியா நம்முடைய விவரங்களை களவாடி கொண்டதாக நினைத்து வாங்கி கொண்டு அடுத்த பக்கத்திற்கு தாவுகிறது..

Saturday, July 16, 2011

Rddr786: Congratulations to Mr.Fakkrudeen for the new (TWIN) baby!


Congratulations. The new baby shall spread smiles and warmth in your family. Babies are the best gifts God can give us .Enjoy your God's gift. Reddiyur Express website's  best wishes are always with you

Tuesday, July 12, 2011

Rddr786:பெல்’ நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

ராணிப்பேட்டை ‘பெல்’ நிறுவனத்தில், உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) ராணிப்பேட்டை தொழிலகத்தில் ஐடிஐ, தொழிற்கல்வி(வொகேஷனல்) பட்டயப் படிப்பு (டிப்ளமோ இன்ஜினியரிங்) மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு (பி.இ., பி.டெக்.,) கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து கணினி வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர்  படிவத்தில் விண்ணப்பித்த பதிவுச் சான்றுடன் உரிய ஆவணங்களை இணைத்து, வரும் 25ம் தேதிக்குள் சேருமாறு அனுப்ப வேண்டும்.


சாதாரண தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும், பாடப்பிரிவு, தொழில் பிரிவு, காலி இடங்கள், உதவித்தொகை மற்றும் இதர விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில் காணலாம். பிற விளக்கங்களை பெற 04172&284325/ 284626 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

 ஐடிஐயில் 249 இடமும், தொழிற்கல்வி பிரிவில் 65 இடமும், டிப்பள்மோ இன்ஜினியரிங் பிரிவில் 125 இடமும், பொறியியல் படிப்பில் 62 இடங்களும் என்று மொத்தம் 501 இடங்கள் உள்ளன.

பயிற்சி காலத்தில் ஒராண்டுக்கு மாதம் ஒன்றுக்கு உதவித்தொகை ஐடிஐ, தொழில்கல்வி பிரிவினருக்கு 3 ஆயிரமும், டிப்ளமோ இன்ஜினியரிங் பிரிவுக்கு 4 ஆயிரமும், பொறியியல் படிப்புக்கு 6 ஆயிரமும் வழங்கப்படும்.

சலுகை கட்டணத்தில் உணவு கிடைக்கும். தங்கும் விடுதி வசதி இல்லை. தொழில்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் 1:3 அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்

Sunday, July 10, 2011

Rddr786:Job Opportunity July 2011

Job Opening.

I hope that this post finds you fit and well.
If you think it would be useful for any other friend of yours kindly forward.

IT ADMINISTRATOR
Position : IT Administrator (Male)
Qualification : Degree / Diploma.
Experience : Minimum 4 Years Experience
Company : Bureau Veritas is a world leader in conformity assessment and certification services

Expected IT Skills:
- Windows2000 / 2003/2008 and XP / Windows 7 Installation and Administration
- Active Directory, FTP administration
- DNS, DHCP, Security Services, LAN, WAN, TCP/IP, Policy, Domain Control
- User Policies and Security Configuration
- Proxy control / Internet Sharing
- Data Backup (Symantec, HP, IBM)
- Email Client Application - Lotus Notes / MS Outlook / Outlook express
- POP3, SMTP Configurations
- Sound knowledge in MS Office
- MacAfee - Client Installation & troubleshooting
- McAfee ePO Console monitoring
- Network / User Monitoring
- Ability to manage existing software's
- Preferred software skills , VB , Ms Access , SQL.../Siebel, etc

To apply please visit - http://www.uaetamilsangam.com/jobopening.asp

AL REYAMI GROUP STEEL INDUSTRIES
Industrial Electrician / Mechanics 2 +2 NO,
(Male) Qualification - ITI Holder
Experience - Industrial Experience 3 Years.

Forklift Operator (Male) (6 NO) with UAE License,
Experience - Minimum 2 Years

Logistics & Shipment Assistant (Male) Qualification - Any Degree,
Experience - 2 Years Minimum

Asst Store Keeper (Male) Qualification Any Degree Holder,
Experience - 2 Years Minimum

Projects Engineers (5 No) (Male) Qualification - Engineer
Minimum 3 to 5 years

Manager (Male) Qualification - Mechanical Engineering
Experience - 15 Plus years

Since the Co., HR Team is receiving Irrelevant CV.
They asked us to shortlist. Please mention the position applied for in the subject line.
To apply please visit -http://www.uaetamilsangam.com/jobopening.asp

DATA ENTRY OPERATOR with medical background and capable to manage the Office Reception
Candidate to send CV - mdjubir@fmchealthcare.ae
(Job Posted: 07-July-2011)

Thanks : Mr.Ramesh Viswanathan

Thursday, July 07, 2011

Rdd786:காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

லால்பேட்டை இஸ்லாமிய மக்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 08.07.11. வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு லால்பேட்டை கைகாட்டியில் லால்பேட்டை அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்பு அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் லால்பேட்டை இஸ்லாமிய போதுமக்கள் அறிவித்துள்ளார்கள் 


http://lalpettaitmmk.blogspot.com/2011/07/blog-post_273.html?spref=fb

Wednesday, July 06, 2011

Rddr786:லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக்க்ல்லூரி 8 வது ஆண்டு பட்டமளிப்பு விழா

லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக்க்ல்லூரி 8 வது ஆண்டுபட்டமளிப்பு விழா.
நாள்: 07.07.2011 வியாழக்கிழமை மாலை 4 மணி
தலைமை:
A.R.சஃபியுல்லா, சைகுல் ஜாமிஆ A.நூருல் அமீன் ஹஜ்ரத்,
கிராஅத் மவ்லவி M.G.முஹ்ஸின் ஹஜ்ரத்
முன்னிலை:
M.H.அப்துல் சலாம்,டாக்டர் A.R. அப்துஸ்ஸமது J.ஹலீலுர் ரஹ்மான், A.R.அப்துல் ரஷீத்,K.A.அமானுல்லா,M.A.பஃதஹூத்தீன்,T.S.நிஜாம் முஹம்மது,M.முஹம்மது எஹ்யா,
M.S.அப்துர் ஹமீத்,M.A.முஹம்மது யூசுப்,
வரவேற்புரை:S.A.தாஹா முஹம்மத்
பட்டம் வழங்குபவர்:
மவ்லவி அப்ஸலுல் உலமா, A.ஃபைஜுர் ரஹ்மான் மதனி ஹஜ்ரத்,
சிறப்புரையாற்றுவோர்:
முப்தி S.A.அப்துர் ரப்பு ஹஜ்ரத்,தளபதி A. ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ,
V.R.அப்துஸ்ஸமது ஹஜ்ரத் ,முஹம்மது காசிம் ஹஜ்ரத், A.முஹம்மது பாருக் ஹஜ்ரத் ,
M.A.ஹாஜா முயீனுத்தின் ஹஜ்ரத் ,
நன்றியுரை: O.A.அப்துல் அலி,
பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி: நேரம்: பகல் 2.00 மணியளவில்
சிறப்புரை:
ஆலிமா உம்மு ஜீனத் ஃபாத்திமா, முபல்லிகா S.மலிக்குன்னிசா ரப்பானியா
(பெண்கள் அரபிக்கல்லூரி கோட்டக்குப்பம்)
முபல்லிகா சனது பெறும் மாணவிகள்
A.மாஹிரா பேகம், M.சுமையா நஸ் ரீன், R.நிலவர் நிஷா, Z.மும்தாஜ் பேகம்,
A.மப்ரூரா, A.J.புரைரா பானு, T.நூருல் ஷிஃபா, A.J.பர்வீன் பானு,A.சமீமா பானு,
A.நஸ்ரின் பானு,M.S.நஸ் ரீன் பாத்திமா, S.ஆபிதா பேகம்

Thanks :Lalpet.com

Monday, July 04, 2011

Rddr786:UAE - விசிட் விசாவில் வருபவர்கள் கவனத்திற்கு ....!

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.


பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ தவறான வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.

மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


படிவம்: SPONSOR'S DECLARATION FORM DOWNLOAD

Source : http://www.inneram.com/

Sunday, July 03, 2011

Rddr786:Current Vacancies

INTERVIEW FOR THE FOLLOWING CATEGORIES ON 04.07.2011 AT 9 AM FOR DUBAI
FACILITIES ENGINEER
FACILITIES SUPERVISOR
SENIOR SUPERVISOR - MEP
SUPERVISOR - HVAC
SUPERVISOR - MECHANICAL
SUPERVISOR - PLUMBING
SUPERVISOR - ELECTRICAL
SUPERVISOR - ELECTRONICS
BMS OPERATOR
SENIOR HVAC TECHNICIAN
HVAC TECHNICIAN
AC TECHNICIAN
ASST. AC TECHNICIAN
SR. TECHNICIAN - MECHANICAL
TECHNICIAN - MECHANICAL
TECHNICIAN - ELECTRONICS
TECHNICIAN - APPLIANCE
SENIOR TECHNICIAN - ELECTRICAL
TECHNICIAN - ELECTRICAL
ELECTRICIAN
ASST. TECHNICIAN - ELECTRICAL
PLUMBING SUPERVISOR
SR. PLUMBER
PLUMBER
MASON TEAM LEADER
MASON
CARPENTER
PAINTER
BMS HELPER
SENIOR CHEMICAL TECHNICIANS

ITI HOLDERS (FRESHERS IN ELECT & A/C) - TECHNICAL TRAINEES


OVERSEAS MANPOWER CORPORATION LTD
(A Government of Tamilnadu Undertaking)

First Floor, Tamilnadu Housing Board Commercial Complex,
No.48, Dr.Muthulakshmi Salai, Adayar,
Chennai - 600 020, Tamilnadu, India.
Tel: 0091-44-24464268, 24464269
Fax: +91 44 24464270
Email:ovemcl@gmail.com
omc_cmd07@rediffmail.com
www.omcmanpower.com 

Wednesday, June 29, 2011

இளம்பெண்களே! வாழ்க்கையில் தடம் புரளாதீர்கள்!

 செல்ஃபோன்; இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது.
விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.]  

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும்? என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூஷன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர், ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.


இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள், மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள், மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.
பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர்கள், "இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் கேட்கும் திறன்’ பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பலபேர் கலந்துகொண்ட ஆய்வின் முடிவில், ஐபாட் போன்றவற்றில் தொடர்ந்து பாடல்கள் கேட்பதால், இளைஞர்களை விட இளம்பெண்கள் வெகுவிரைவாக கேட்கும் திறனை இழந்துவிடுவதாக தெரிந்துள்ளது
ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் எலிசபெத் ஹெண்டர்சென் இதுகுறித்து கூறியதாவது: ஆய்வில் பங்குபெற்ற அனைவருக்கும் கேட்கும் திறன் பற்றிய சோதனை நடத்தப்பட்டது. அதில், இளைஞர்களை விட, 17 சதவீத அளவிலான இளம்பெண்களுக்கு கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதுதான் கேட்கும் திறன் குறைவதற்கு காரணம் என தெரிந்தது.
கடந்த 1980ம் ஆண்டுகளில் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்பது என்பது 20 சதவீதமாக இருந்தது. 1990களில் இன்னும் அதிகரித்து 35 சதவீதமானது. இப்போது, செல்போன், ஐபாட், டிராய்ட், பிளாக்பெர்ரி என விதவிதமான சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர் 24 மணிநேரமும் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்டபடியே உள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும் பாதிப்புகள் நிச்சயம் என்றாலும், இளம்பெண்கள் தான் வெகுவிரைவில் காதுகேட்கும் திறனை இழக்கின்றனர். இவ்வாறு எலிசபெத் ஹெண்டர்சென் கூறினார்.


காது கேட்கும் திறனை இழப்பதுமட்டுமின்றி அன்னிய ஆடவர்களின் செல்ஃபோன் தொடர்பினால் சட்டவிரோதக் கருக்கலைப்பிற்கு இட்டுச் செல்கின்ற காதல்கள் இன்று சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. மறுபுறத்தில் இளவயது விவாகரத்துக்கள் பெருகிவருவதாக சமுதாய அனுதாபிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


கீழுள்ள திருக்குர்ஆனின் போதனையை செவிமடுங்கள்;

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

இன்றைய நவநாகரீக இளம்பெண்கள் ஆடை அலங்காரங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை அள்ளி விடுகிறார்கள். அதே போல் வாசனை திரவியங்கள், சோப்பு போன்றவற்றுக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள். வெளி பகட்டுக்காக பணத்தை தண்ணீராய் செலவழிக்கிறார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

http://www.nidur.info

 

Monday, June 27, 2011

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை; சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர், ஜூன் 24: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு சிறுபான்மை இன மாணவ, மாணவியர் (கிறிஸ்தவர், இஸ்லாமியர், பெüத்தர், சீக்கியர், பாரசீக மதத்தினர்) விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஆட்சியரின் செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11, 12-ம் வகுப்புகள், வாழ்க்கைத் தொழில் கல்வி, ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக், நர்சிங் டிப்ளமோ, ஆசிரியர் பட்டயப் பயிற்சி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு (எம்.பி.ஏ., எம்.சி.ஏ நீங்கலாக) பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர், இஸ்க்ப் உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட கல்வி நிலையங்கள், தகுதி உள்ள மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி உதவித் தொகை பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் 50 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குக் குறையாமல் இருக்கவேண்டும். வேறு கல்வி உதவித் தொகை பெற்று இருக்கக் கூடாது. குடும்பத்தில் இருவருக்கு மட்டும் உவித் தொகை வழங்கப்படும்.
11-ம், 12-ம் வகுப்பு மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 4-7-2011 க்குள்ளும், புதிய வின்ணப்பங்களை 11-7-2011 க்குள்ளும், பிற மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 30-6-2011 க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 15-7-2011 க்குள்ளும் தங்கள் கல்வி நிலையங்களில் அளிக்கவேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Friday, June 17, 2011

Rddr786: ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம்


 காட்டுமன்னார்கோவிலில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளதாக ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் தெரிவித்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலத்தில் ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துவக்க விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் தாளாளர் பழனி, வீராசாமி, நடராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் மணிரத்தினம் தேசியகொடியேற்றி பள்ளியை திறந்து வைத்து பேசியதாவது: ஏழை மாணவர்கள் முழு கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக பின்தங்கிய இப்பகுதியில் ராஜிவ்காந்தி பெயரில் பள்ளி துவக்கப்பட்டுள்ளது. தற்போது 2,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதி வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்பகுதி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக வரும் 2012ம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்படும். இவ்வாறு தாளாளர் மணிரத்தினம் பேசினார்.

Thursday, June 09, 2011

Rddr786:முட்டம் பாலம் கட்டும் பணி...தீவிரம்

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் நாகை - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் 48 கோடி ரூபாயில் கட்டப்படும் முட்டம் பாலம் பணி இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் பகுதியில் கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 48 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இரு மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், வியாபார ரீதியாக இரு மாவட்ட பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் இப்பாலம் கட்டப்படுகிறது. பாலம் பணி முடிவடைந்தால் நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு பிரதான சாலையாகிவிடும். சென்னையில் இருந்து நாகை மாவட்டத்திற்குச் செல்பவர்கள் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், முட்டம், பட்டவர்த்தி, வில்லியநல்லூர், நீடூர், மயிலாடுதுறை சென்று விடலாம். அதேப்போன்று காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள கிராம மக்கள் மயிலாடுதுறை செல்வதற்கு சிதம்பரம் வந்து சீர்காழி வழியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாகை கொள்ளிடக்கரை கிராம மக்களும் 70 கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டிய நிலை தவிர்க்கப்படும். இதனால் 2.30 மணி நேரம் செல்ல வேண்டியது ஒரு மணி நேரம் மிச்சமாகி விடும். முட்டம் பாலம் கட்ட வேண்டும் என 1974ம் ஆண்டு அப்போதைய காட்டுமன்னார்கோவில் சேர்மனும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சியால் பாலம் கொண்டு வரப்பட்டது. நபார்டு உதவியுடன் தமிழக அரசு 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி துவக்கியுள்ளது. நிலம் ஆர்ஜித பணிகள் முடிந்து கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி பணி துவங்கியது. துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாலம் கட்ட ஒன்றரை ஆண்டுகள் திட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அது 12 மாதமாக குறைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெய்த மழை, கொள்ளிடத்தில் வெள்ளம் என இயற்கை இடர்பாடுகளால் பாலம் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. 5 மாதங்கள் பணிகள் நடைபெறாமல் போனதால் பணிகள் முடித்திருக்க வேண்டிய நிலையில் 50 சதவீத பணிகள்தான் முடிந்துள்ளது. பாலத்திற்கு 36 பில்லர்கள் அமைக்கும் பணி முடிவடைந்து அதன்மேல் தளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பணிகள் முடிய மேலும் அவகாசம் தேவை என்பதால் வரும் 2012 ஜூலை மாதம் பணி முழுமை பெற்று விடும் என தெரிகிறது. அதையொட்டி பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது.

Thursday, June 02, 2011

Rddr786:படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்!

டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவைகளில் தலித் இன மக்களை விட தாழ்ந்து இருக்கிறார்கள் என நீதிபதிகள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் சொல்கின்றன. ஆனால் நம்மிடையே அறிவுசால் இளைஞர்கள், மாணவர்கள் இல்லையா?! என்றால் இருக்கிறார்கள். அவர்களுக்க உதவ சமுதாய இயக்கங்கள் தயாரா என்ற கேள்வியினை எழுப்புகின்றார் ஒரு பள்ளி மாணவர்.
    27.5.2011 அன்று பத்தாம் வகுப்பு மாணவர் தேர்வு முடிவுகள் வெளியாயின. என்ன ஆச்சரியம் அதில் ஒரு முஸ்லிம் மாணவர் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் வாங்கியுள்ளார். அவர் படம் 28.5.2011 பத்திரிக்கையில் வந்தன. நீங்களெல்லாம் நினைத்திருப்பீர்கள் அவர் மாநகரமான சென்னையிலே அல்லது மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற வசதியும், வாய்ப்பும் உள்ள நகரிலிருந்தோ, மிகவும் தரம் வாய்ந்த படிப்பினைத் தரும் பள்ளியிலிருந்தோ, மற்றும் பணத்தினை அள்ளி தெளித்து டூயுசன் வைத்து படித்த மாணவராக இருக்குமென்று.
    ஆனால் அந்த மாணவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாத்தினையும், ஈமானையும் கட்டியாக பிடித்திருக்கும் மேலைப்பாளைய நகரைச் சார்ந்தவர் என்று நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் இனித்தது. ஏன் தெரியுமா? மேலைப்பாளையத்தில் சாதாரண பீடி சுத்தும் கம்பெனியில் மாதம் ரூ 4000 வருமானத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மூத்த மகன் தான் அந்த மாணவர். தன் தந்தையின் நான்கு பிள்ளைகளில் மூத்த மகனான, மறைந்த ஈராக் அதிபர் மாவீரன் சதாம் ஹூசைனின் பெயரினைத் தாங்கியவர் படித்த பள்ளி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியாகும்.  தன் குடும்பமே எதிர்பார்க்காத நிலையில் அவர் மாநிலத்தில் மொத்த 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தினை தட்டிச் சென்றுள்ளார்.
    தந்தை அப்துல் ரஹ்மான் தன் மகவினை கையைக் கட்டி, வாயைக் கட்டி மாநிலத்தில் சிறந்த மாணவனாக ஆக்கியதால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றிருப்பார் என நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போது, ‘தன் மகன் வெற்றி பெற்றதிற்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் தான் முக்கியம். மேல் படிப்பினை படித்து மெக்கானிக்கல் இன்ஜீரியங் ஆக வேண்டும். என சதாம் விரும்புகிறான். எனக்கு மேலும் மூன்று பிள்ளைகள் இருப்பதால் அவனை எப்படி இன்ஜினீரியங் படிப்பிற்கு படிக்க வைப்பது எனத் தெரியவில்லை என்று கவலையாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
    ஏன் இல்லை என்று  சொல்லும் அளவிற்கு நமது சமுதாய இயக்கங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவது கண்கூடானது. உதாரணத்திற்கு, 1) மைத்திற்கு ஜனாஸா ஐஸ் பெட்டிகள், 2) அவசர சிகிச்சைகளுக்கு ஆம்புலன்ஸ், 3) அறுவை சிகிச்சைக்களுக்குத் தேவைப்படும் ரத்ததானம்,4) ஏழைக் குமருகளுக்கு திருமண செலவுகள் ஏற்றல், 5) சுயவேலைகள் செய்வதிற்கு பொருளாதார உதவி, 6) வயதானவர்களுக்கு பொருளாதார உதவி போன்ற சேவைகளினை செய்து மக்களின் பாராட்டுதலை செய்கின்றனர.
    ஆகவே நமது சமுதாய இயக்கங்கள் ஸதாம் ஹூசைன் பேன்ற சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவியிரினை அடையாளம் கண்டு அவர்களை தத்தெடுத்து அவர்கள் மேல் படிப்பிற்க்கு உதவுவதுடன் அவர்களுக்கு அரசு மானியமும் கிடைக்க வழிவகை செய்யதால் கூலித்தொழிலாளி அப்துல் ரஹ்மான் போன்ற ஏழைப் பெற்றோர் குடும்பத்தில் உள்ளவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் என்றால் மிகையாகுமா தோழர்களே

Wednesday, June 01, 2011

Rddr786:லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவையையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அவசர உதவிக்காக இலவச ஆட்டோ சேவை துவங்கப்பட்டது. வயதானவர்கள், பிரசவத்திற்கும் செல்பவர்கள் மற்றும் அவசர உதவிக்காக இரண்டு ஆட்டோக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமையில் இலவச ஆட்டோ சேவையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tuesday, May 31, 2011

Rddr786:வீடு புகுந்து தாக்கி கொள்ளை லால்பேட்டையில் பரபரப்பு

பதிவு செய்த நாள் : மே 29,2011,23:56 IST
 காட்டுமன்னார்கோவில் அருகே வீடு புகுந்து தாக்கி கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை காங்கிருப்பு பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜியாவுதீன். இவர் லால்பேட்டை கைகாட்டியில் டீக் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து பூரோவை உடைத்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். மேலும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜியாவுதீன் மனைவியின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தாலிச் செயினையும் அறுத்தனர். உடன் அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முகமது ரபிக் ஓடி வந்த போது, அவரை கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு மோப்பநா# மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து தாக்கி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=248723

Sunday, May 29, 2011

Rddr786:கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு உதவி தொகைகள்!

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை!
எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.
கல்லூரி மாணவர்களுக்கான‌ உதவித் தொகைகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை/அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன‌.
மாணவிகளுக்கு: 
முதுநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பிள்ளைகள்:
இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்
கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குந‌ர்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.

படை வீரர்களின் பிள்ளைகள்:  
பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குன‌ருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களின் பிள்ளைகள்:  
முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. படிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம்.

வகுப்பு வாரியாக: 
இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஒரே பெண் குழந்தை:  
தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி/ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி./எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித் தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்ச‌னை இருந்தாலோ அது குறித்து ஆலோசனைப் பெறவும்,

தொலைபேசி எண்கள்: 044 -28271911/6792/28212090 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இலவசக் கல்வி:
குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை சென்ற கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்விப் படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்' என சென்ற வருடம் ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களைச் சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்கவேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெறவேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்த‌து.

குறிப்பு:
மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இவை அனைத்தும் பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள இந்த தகவல்களைப் பார்க்க முடியாத/அறிய வாய்ப்பில்லாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, அவரவர்களுக்கு முடிந்தவரை இந்தச் செய்திகளை கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி-பயணிக்கும் பாதை & www.nidur.info

Wednesday, May 18, 2011

Rddr786:மே 24ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

வருகிற 24ம் தேதியன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. 10 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இத்தேர்வு முடிவுகள், வரும் 24ம் தேதி வெளியாகிறது.

Tuesday, May 17, 2011

Rddr786:குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா?

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். குழந்தை பெற்று கொள்வதற்கு சில அறிய ஆலோசனைகள்.
1) ஆரோக்கியமாக இருங்கள்:
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.  
2) சரியான விதத்தில் சாப்பிடுங்கள்:
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.
3) உடல் பயிற்சி:
அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
4) சரியான நேரம்:
ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.
5) பாலியல் அறிவு அவசியம்:
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.
6) உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்:
கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

Thanks:http://www.nidur.info

Saturday, May 14, 2011

Rddr786:சட்டசபைத் தேர்தலில் முழு தேர்தல் முடிவுகள்...


அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்
அதிமுக
1.ஸ்ரீரங்கம்
2.ராசிபுரம்
3.கோவை தெற்கு
4.அறந்தாங்கி
5.பழனி
6.நாகப்பட்டினம்
7.செய்யூர்
8.சீர்காழி
9.குளித்தலை
10.வீரபாண்டி
11.கன்னியாகுமரி
12.கிருஷ்ணராயபுரம்
13.கிணத்துக்கடவு
14.தொண்டாமுத்தூர்
15.அம்பாசமுத்திரம்
16.தஞ்சை
17.மதுராந்தகம்
18.ஒரத்தநாடு
19.பல்லடம்
20.உடுமலை
21.உளுந்தூர் பேட்டை
22.சங்ககிரி
23.பூந்தமல்லி
24.சைதாப்பேட்டை
25.தியாகராயநகர்
26.சாத்தூர்
27.பொள்ளாச்சி
28.ஈரோடுமேற்கு
29.ஆலங்குடி
30.கடையநல்லூர்
31.நாகர்கோவில்
32.சோழவந்தான்
33.அந்தியூர்
34.பெருந்துறை
35.மொடக்குறிச்சி
36.மணப்பாறை
37.ஊட்டி
38.விராலிமலை
39.மேட்டுப்பாளையம்
40.பூம்புகார்
41.ஏற்காடு
42.திருச்சி கிழக்கு
43.உத்திரமேரூர்
44.சிவகாசி
45.ராஜபாளையம்
46.திருப்பூர் வடக்கு
47.தாராபுரம்
48.அவினாசி
49.துறைமுகம்
50.ராயபுரம்
51.ஆர்.கே.நகர்
52.காஞ்சீபுரம்
53.கரூர்
54.நாமக்கல்
55.சேலம் மேற்கு
56.குமாரபாளையம்
57.ஆத்தூர்
58.திருச்சி மேற்கு
59.ஜோலார்பேட்டை
60.திருப்பத்தூர்
61.கீழ்பெண்ணாத்தூர்
62.ஆற்காடு
63.ராணிப்பேட்டை
64.திண்டிவனம்
65.திருமயம்
66.மயிலம்
67.நத்தம்
68.தூத்துக்குடி
69.விளாத்திகுளம்
70.ஸ்ரீவைகுண்டம்
71.பவானி
72.கந்தர்வகோட்டை
73.கோபி
74.வில்லிவாக்கம்
75.மாதவரம்
76.காங்கேயம்
77.பல்லாவரம்
78.திரு.வி.க.நகர்
79.மயிலாப்பூர்
80.ஆயிரம்விளக்கு
81.கவுண்டம் பாளையம்
82.புவனகிரி
83.வேதாரண்யம்
84.நன்னிலம்
85.இடைப்பாடி
86.போடிநாயக்கனூர்
87.ஓமலூர்
88.மடத்துக்குளம்
89.திருவையாறு
90.கோவில்பட்டி
91.அருப்புக்கோட்டை
92.மணச்சநல்லூர்
93.தாம்பரம்
94.வாசுதேவநல்லூர்
95.கள்ளக்குறிச்சி
96.திருமங்கலம்
97.பாலக்கோடு
98.முசிறி
99.சங்கரன்கோவில்
100.பாபநாசம்
101.நெய்வேலி
102.விழுப்புரம்
103.முதுகுளத்தூர்
104.பரமக்குடி
105.துறையூர்
106.சோழிங்கநல்லூர்
107.பொன்னேரி
108.திருவொற்றியூர்
109.அண்ணாநகர்
110.ஆவடி
111.ஸ்ரீபெரும்புதூர்
112.திருப்போரூர்
113.கோவை வடக்கு
114.சிங்காநல்லூர்
115.மதுரைவடக்கு
116.ஆலங்குளம்
117.வேலூர்
118.காட்டுமன்னார் கோவில்
119.பாப்பி ரெட்டிபட்டி
120.வாணியம்பாடி
121.திருவள்ளூர்
122.வேளச்சேரி
123.திருப்பத்தூர்
124.மதுரை மேற்கு
125.சங்கராபுரம்
126.வானூர்
127.ஊத்தங்கரை
128.சேலம் தெற்கு
129.கடலூர்
130.அரக்கோணம்
131.மதுரை கிழக்கு
132.அரியலூர்
133.பெரம்பலூர்
134.கிருஷ்ணகிரி
135.பர்கூர்
136.அம்பத்தூர்
137.குறிஞ்சிப்பாடி
138.ஆண்டிப்பட்டி
139.நெல்லை
140.மேலூர்
141.வேடசந்தூர்
142.மானாமதுரை
143.கலசப்பாக்கம்
144.போளூர்
145.வந்தவாசி
146.செய்யாறு
147.காரைக்குடி
  
தே.மு.தி.க
1.ரிஷிவந்தியம்
2.திருக்கோவிலூர்
3.விருதுநகர்
4.செங்கல்பட்டு
5.திருச்செங்கோடு
6.விருகம்பாக்கம்
7.ஈரோடுகிழக்கு
8.செங்கம்
9.கெங்கவல்லி
10.மதுரைமத்தி
11.சேந்தமங்கலம்
12.ஆலந்தூர்
13.திட்டக்குடி
14.எழும்பூர்
15.ராதாபுரம்
16.திருப்பரங்குன்றம்
17.பண்ருட்டி
18.மயிலாடுதுறை
19.திருத்தணி
20.தர்மபுரி
21.பேராவூரணி
22.திருவெறும்பூர்
23.மேட்டூர்
24.சேலம் வடக்கு
25.சோளிங்கர்
26.விருத்தாசலம்
27.ஆரணி
  
சி பி எம்
1.கீழ்வேளூர்
2.மதுரை தெற்கு
3.பெரம்பூர்
4.திருப்பூர் தெற்கு
5.மதுரவாயல்
6.பெரியகுளம்
7.திண்டுக்கல்
8.சிதம்பரம்
9.அரூர்
10.விக்கிரவாண்

சி பி ஐ 
1.திருத்துறைப்பூண்டி
2.வால்பாறை
3.குடியாத்தம்
4.ஸ்ரீவில்லிபுத்தூர்
5.பவானிசாகர்
6.புதுக்கோட்டை
7.சிவகங்கை
8.பென்னாகரம்
9.தளி

மனிதநேய மக்கள் கட்சி
1.ராமநாதபுரம்
2.ஆம்பூர்

புதியதமிழகம்
1.ஓட்டப்பிடாரம்
2.நிலக்கோட்டை

சமத்துவ மக்கள் கட்சி
1.தென்காசி
2.நாங்குனேரி

பார்வர்டுபிளாக்
1.உசிலம்பட்டி

இந்திய குடியரசு கட்சி
1.கே.வி.குப்பம்

கொங்கு இளைஞர் பேரவை
1.பரமத்தி வேலூர்

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்:
திமுக
1. திருவாரூர்

2. குன்னூர்
3. பத்மநாபபுரம்
4. திருச்சுழி
5. கம்பம்
6. சேப்பாக்கம்
7. திருச்செந்தூர்
8. பாளையங்கோட்டை
9. காட்பாடி
10. திருவிடைமருதூர்
11. லால்குடி
12. கும்பகோணம்
13. அரவக்குறிச்சி
14. மன்னார்குடி
15. திருவாடானை
16. ஆத்தூர்
17. குன்னம்
18. வேப்பனப்பள்ளி
19. கொளத்தூர்
20. ஒட்டன்சத்திரம்
21. கூடலூர்
 

காங்கிரஸ்
1. விளவங்கோடு

2. கிள்ளியூர்
3. குளச்சல்
4. பட்டுக்கோட்டை
5. ஓசூர்
 

பா.ம.க
1. ஜெயங்கொண்டம்

2. செஞ்சி
3. அணைக்கட்டு

சென்னை அதிமுக கோட்டை :  16 க்கு 14 இல் வெற்றி!
சென்னை திமுகவின் கோட்டை என்பது பழங்கதையாகி விட்டது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 14 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதில் அதிமுகவுக்கு மட்டும் 11 தொகுதிகள் கிடைத்துள்ளன.

மற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் பிடித்துள்ளன.
திமுகவுக்கு சென்னையில் தற்போது கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.