அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, May 31, 2011

Rddr786:வீடு புகுந்து தாக்கி கொள்ளை லால்பேட்டையில் பரபரப்பு

பதிவு செய்த நாள் : மே 29,2011,23:56 IST
 காட்டுமன்னார்கோவில் அருகே வீடு புகுந்து தாக்கி கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை காங்கிருப்பு பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜியாவுதீன். இவர் லால்பேட்டை கைகாட்டியில் டீக் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து பூரோவை உடைத்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். மேலும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜியாவுதீன் மனைவியின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தாலிச் செயினையும் அறுத்தனர். உடன் அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முகமது ரபிக் ஓடி வந்த போது, அவரை கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு மோப்பநா# மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து தாக்கி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=248723

Sunday, May 29, 2011

Rddr786:கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு உதவி தொகைகள்!

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை!
எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.
கல்லூரி மாணவர்களுக்கான‌ உதவித் தொகைகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை/அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன‌.
மாணவிகளுக்கு: 
முதுநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பிள்ளைகள்:
இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்
கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குந‌ர்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.

படை வீரர்களின் பிள்ளைகள்:  
பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குன‌ருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களின் பிள்ளைகள்:  
முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. படிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம்.

வகுப்பு வாரியாக: 
இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஒரே பெண் குழந்தை:  
தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி/ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி./எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித் தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்ச‌னை இருந்தாலோ அது குறித்து ஆலோசனைப் பெறவும்,

தொலைபேசி எண்கள்: 044 -28271911/6792/28212090 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இலவசக் கல்வி:
குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை சென்ற கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்விப் படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்' என சென்ற வருடம் ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களைச் சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்கவேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெறவேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்த‌து.

குறிப்பு:
மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இவை அனைத்தும் பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள இந்த தகவல்களைப் பார்க்க முடியாத/அறிய வாய்ப்பில்லாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, அவரவர்களுக்கு முடிந்தவரை இந்தச் செய்திகளை கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி-பயணிக்கும் பாதை & www.nidur.info

Wednesday, May 18, 2011

Rddr786:மே 24ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

வருகிற 24ம் தேதியன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. 10 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இத்தேர்வு முடிவுகள், வரும் 24ம் தேதி வெளியாகிறது.

Tuesday, May 17, 2011

Rddr786:குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா?

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். குழந்தை பெற்று கொள்வதற்கு சில அறிய ஆலோசனைகள்.
1) ஆரோக்கியமாக இருங்கள்:
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.  
2) சரியான விதத்தில் சாப்பிடுங்கள்:
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.
3) உடல் பயிற்சி:
அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
4) சரியான நேரம்:
ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.
5) பாலியல் அறிவு அவசியம்:
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.
6) உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்:
கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

Thanks:http://www.nidur.info

Saturday, May 14, 2011

Rddr786:சட்டசபைத் தேர்தலில் முழு தேர்தல் முடிவுகள்...


அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்
அதிமுக
1.ஸ்ரீரங்கம்
2.ராசிபுரம்
3.கோவை தெற்கு
4.அறந்தாங்கி
5.பழனி
6.நாகப்பட்டினம்
7.செய்யூர்
8.சீர்காழி
9.குளித்தலை
10.வீரபாண்டி
11.கன்னியாகுமரி
12.கிருஷ்ணராயபுரம்
13.கிணத்துக்கடவு
14.தொண்டாமுத்தூர்
15.அம்பாசமுத்திரம்
16.தஞ்சை
17.மதுராந்தகம்
18.ஒரத்தநாடு
19.பல்லடம்
20.உடுமலை
21.உளுந்தூர் பேட்டை
22.சங்ககிரி
23.பூந்தமல்லி
24.சைதாப்பேட்டை
25.தியாகராயநகர்
26.சாத்தூர்
27.பொள்ளாச்சி
28.ஈரோடுமேற்கு
29.ஆலங்குடி
30.கடையநல்லூர்
31.நாகர்கோவில்
32.சோழவந்தான்
33.அந்தியூர்
34.பெருந்துறை
35.மொடக்குறிச்சி
36.மணப்பாறை
37.ஊட்டி
38.விராலிமலை
39.மேட்டுப்பாளையம்
40.பூம்புகார்
41.ஏற்காடு
42.திருச்சி கிழக்கு
43.உத்திரமேரூர்
44.சிவகாசி
45.ராஜபாளையம்
46.திருப்பூர் வடக்கு
47.தாராபுரம்
48.அவினாசி
49.துறைமுகம்
50.ராயபுரம்
51.ஆர்.கே.நகர்
52.காஞ்சீபுரம்
53.கரூர்
54.நாமக்கல்
55.சேலம் மேற்கு
56.குமாரபாளையம்
57.ஆத்தூர்
58.திருச்சி மேற்கு
59.ஜோலார்பேட்டை
60.திருப்பத்தூர்
61.கீழ்பெண்ணாத்தூர்
62.ஆற்காடு
63.ராணிப்பேட்டை
64.திண்டிவனம்
65.திருமயம்
66.மயிலம்
67.நத்தம்
68.தூத்துக்குடி
69.விளாத்திகுளம்
70.ஸ்ரீவைகுண்டம்
71.பவானி
72.கந்தர்வகோட்டை
73.கோபி
74.வில்லிவாக்கம்
75.மாதவரம்
76.காங்கேயம்
77.பல்லாவரம்
78.திரு.வி.க.நகர்
79.மயிலாப்பூர்
80.ஆயிரம்விளக்கு
81.கவுண்டம் பாளையம்
82.புவனகிரி
83.வேதாரண்யம்
84.நன்னிலம்
85.இடைப்பாடி
86.போடிநாயக்கனூர்
87.ஓமலூர்
88.மடத்துக்குளம்
89.திருவையாறு
90.கோவில்பட்டி
91.அருப்புக்கோட்டை
92.மணச்சநல்லூர்
93.தாம்பரம்
94.வாசுதேவநல்லூர்
95.கள்ளக்குறிச்சி
96.திருமங்கலம்
97.பாலக்கோடு
98.முசிறி
99.சங்கரன்கோவில்
100.பாபநாசம்
101.நெய்வேலி
102.விழுப்புரம்
103.முதுகுளத்தூர்
104.பரமக்குடி
105.துறையூர்
106.சோழிங்கநல்லூர்
107.பொன்னேரி
108.திருவொற்றியூர்
109.அண்ணாநகர்
110.ஆவடி
111.ஸ்ரீபெரும்புதூர்
112.திருப்போரூர்
113.கோவை வடக்கு
114.சிங்காநல்லூர்
115.மதுரைவடக்கு
116.ஆலங்குளம்
117.வேலூர்
118.காட்டுமன்னார் கோவில்
119.பாப்பி ரெட்டிபட்டி
120.வாணியம்பாடி
121.திருவள்ளூர்
122.வேளச்சேரி
123.திருப்பத்தூர்
124.மதுரை மேற்கு
125.சங்கராபுரம்
126.வானூர்
127.ஊத்தங்கரை
128.சேலம் தெற்கு
129.கடலூர்
130.அரக்கோணம்
131.மதுரை கிழக்கு
132.அரியலூர்
133.பெரம்பலூர்
134.கிருஷ்ணகிரி
135.பர்கூர்
136.அம்பத்தூர்
137.குறிஞ்சிப்பாடி
138.ஆண்டிப்பட்டி
139.நெல்லை
140.மேலூர்
141.வேடசந்தூர்
142.மானாமதுரை
143.கலசப்பாக்கம்
144.போளூர்
145.வந்தவாசி
146.செய்யாறு
147.காரைக்குடி
  
தே.மு.தி.க
1.ரிஷிவந்தியம்
2.திருக்கோவிலூர்
3.விருதுநகர்
4.செங்கல்பட்டு
5.திருச்செங்கோடு
6.விருகம்பாக்கம்
7.ஈரோடுகிழக்கு
8.செங்கம்
9.கெங்கவல்லி
10.மதுரைமத்தி
11.சேந்தமங்கலம்
12.ஆலந்தூர்
13.திட்டக்குடி
14.எழும்பூர்
15.ராதாபுரம்
16.திருப்பரங்குன்றம்
17.பண்ருட்டி
18.மயிலாடுதுறை
19.திருத்தணி
20.தர்மபுரி
21.பேராவூரணி
22.திருவெறும்பூர்
23.மேட்டூர்
24.சேலம் வடக்கு
25.சோளிங்கர்
26.விருத்தாசலம்
27.ஆரணி
  
சி பி எம்
1.கீழ்வேளூர்
2.மதுரை தெற்கு
3.பெரம்பூர்
4.திருப்பூர் தெற்கு
5.மதுரவாயல்
6.பெரியகுளம்
7.திண்டுக்கல்
8.சிதம்பரம்
9.அரூர்
10.விக்கிரவாண்

சி பி ஐ 
1.திருத்துறைப்பூண்டி
2.வால்பாறை
3.குடியாத்தம்
4.ஸ்ரீவில்லிபுத்தூர்
5.பவானிசாகர்
6.புதுக்கோட்டை
7.சிவகங்கை
8.பென்னாகரம்
9.தளி

மனிதநேய மக்கள் கட்சி
1.ராமநாதபுரம்
2.ஆம்பூர்

புதியதமிழகம்
1.ஓட்டப்பிடாரம்
2.நிலக்கோட்டை

சமத்துவ மக்கள் கட்சி
1.தென்காசி
2.நாங்குனேரி

பார்வர்டுபிளாக்
1.உசிலம்பட்டி

இந்திய குடியரசு கட்சி
1.கே.வி.குப்பம்

கொங்கு இளைஞர் பேரவை
1.பரமத்தி வேலூர்

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்:
திமுக
1. திருவாரூர்

2. குன்னூர்
3. பத்மநாபபுரம்
4. திருச்சுழி
5. கம்பம்
6. சேப்பாக்கம்
7. திருச்செந்தூர்
8. பாளையங்கோட்டை
9. காட்பாடி
10. திருவிடைமருதூர்
11. லால்குடி
12. கும்பகோணம்
13. அரவக்குறிச்சி
14. மன்னார்குடி
15. திருவாடானை
16. ஆத்தூர்
17. குன்னம்
18. வேப்பனப்பள்ளி
19. கொளத்தூர்
20. ஒட்டன்சத்திரம்
21. கூடலூர்
 

காங்கிரஸ்
1. விளவங்கோடு

2. கிள்ளியூர்
3. குளச்சல்
4. பட்டுக்கோட்டை
5. ஓசூர்
 

பா.ம.க
1. ஜெயங்கொண்டம்

2. செஞ்சி
3. அணைக்கட்டு

சென்னை அதிமுக கோட்டை :  16 க்கு 14 இல் வெற்றி!
சென்னை திமுகவின் கோட்டை என்பது பழங்கதையாகி விட்டது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 14 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதில் அதிமுகவுக்கு மட்டும் 11 தொகுதிகள் கிடைத்துள்ளன.

மற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் பிடித்துள்ளன.
திமுகவுக்கு சென்னையில் தற்போது கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

Rddr786:சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள்!

அ.தி.மு.க: 3 பேர்
1. எஸ். அப்துர்ரஹீம் (ஆவடி)

2. முஹம்மத் ஜான் (ராணிப்பேட்டை)
3. என். மரியம் பிச்சை (திருச்சி மேற்கு)

ம.ம.க: 2
1. ஜவாஹிருல்லாஹ் (ராமநாதபுரம்)
2. அஸ்லம் பாட்சா (ஆம்பூர்)
தி.மு.க: 1

1. மைதீன்கான் (பாளையங்கோட்டை)

Rddr786:ரெட்டியூர் ரெமிஜா பீவி மறைவு.

அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மனைவி ஜனாப் ஹாஜா, ஜனாப் முகமது ரபீக் ,ஜனாப் அப்துல் பாசித் அவர்களின் தாயார்  ரெமிஜா பீவி இன்று 13.05.2011 இரவு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

Thursday, May 12, 2011

Rddr786:ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி !

அஸ்ஸலாமு அலைக்கும்.
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.
நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:
  1. மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  2. உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
  3. கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  4. உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.
மேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி, http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :

 
இரெட்டியூர் Express கோரிக்கை: தேவையுள்ளோர் பயன்பெற உதவிடும் ஒரு பாலமாக, நீங்கள் அறிந்த ஏழை மாணவர்களுக்கு, நண்பர்களுக்கு இப்பக்கத்தினை அச்செடுத்து விநியோகம் செய்யுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Thanks : சத்தியமார்க்கம்.காமின் இப்பக்கத்திற்கான சுட்டி: http://www.satyamargam.com/1700

Monday, May 09, 2011

Rddr786:சிறப்பு சொற்பொழிவு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அழகிய கடன் அறக்கட்டளை மற்றும் makkamasjid.com வழங்கும்
வழங்குபவர் : மௌலானா ஷம்சுதீன் காஸிமி
Is now available @ http://www.makkamasjid.com/
  • திருமணத்தில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்தான நடைமுறைகள்
  • திருமனத்திருக்கு முன் பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம் போன்றவற்றின் விளக்கம்
  • திருமணத்தில் தவிர்க்கப்பட வேண்டிய பித்அத் மற்றும் அனாச்சாரங்கள்
  • மணவாழ்க்கையை துவங்குவோருக்கு மார்க்கம் கூறும் அறிவுரை
    மற்றும் தாம்பத்திய ஒழுக்கங்கள்

Rddr786:+2 தேர்வு முடிவு ; மாணவ - மாணவிகள் ;சம அளவில் சாதனை

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல மாணவியே முதலிடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் வேல்முருகன் இரண்டாமிடத்தை பிடித்தார். 3 வது இடத்தை மாணவ, மாணவிகள் 4 பேர் பிடித்துள்னர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

3 வது இடத்தை 4 பேர் பிடித்துள்ளனர். வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒசூர் விஜய்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரேகா என்பவர் ஆயிரத்து 190 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். கணிதத்தில் 2 ஆயிரத்து 720 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடவாரியாக 200க்கு 200 மார்க்குகள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு: இயற்பியல் : 646, உயிரியியல்: 615 , வணிகவியல்: ஆயிரத்து 166, வேதியியல்: ஆயிரத்து 243 பேர். கம்ப்யூ., சயின்சில் 223 பேர், தவாரவியலில் 14 பேர் விலங்கியலில் யாரும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை.

தமிழ் மொழிப் பாடத்தில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1172. 2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198 மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156. 3வது இடம் பிடித்த மாணவர் தினகரன் . எம். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகு

ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை(85.15%) விட ( 85.9 சதம்) அதிகரித்துள்ளன

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2 முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் சார்பில், ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வு வகையில், 57 ஆயிரத்து, 86 மாணவர்களும் தேர்வெழுதினர். ஆயிரத்து,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

மாணவர்கள் ஆவலுடன் எதிர்பர்த்த இந்த முடிவுகளை இன்று காலை 9.00 மணிக்கு கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். இதே நேரத்தில், அந்தந்த பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளும் ஒட்டப்பட்டன

Rddr786:Congratulation !!! மர்ஜூக்,ஹம்தான்,ஆரிப் ,தௌபிக் மற்றும் ரிபாயா

 தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர்         டி. வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டார்
நமதூர் +2 மாணவர்கள் மர்ஜூக்(1135), ஹம்தான்(833),ஆரிப் (835),தௌபிக்(610) மற்றும் ரிபாயா(906) அனவைரும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்கள் ...அவர்கள் மேலும் உயர் கல்வி பெற வாழ்த்துகிறோம்
வாழ்த்துகள் !
வாழ்த்துகள் !!
வாழ்த்துகள் !!!

Saturday, May 07, 2011

rddr786:இணையதளத்தில் +2 தேர்வு முடிவுகள்!

 தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் +2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி திங்கள் கிழமை வெளியாகிறது.




இந்தத் தேர்வு முடிவுகளை வழக்கம்போல்


2) http://www.pallikalvi.in/default.aspx

3) http://www.results.dinamani.com/ 

4) http://www.dinamalar.com/

5) www.kalvimalar.com

இணையதளத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.


 http://www.dinamalar.com/registration/ 

என்ற முகவரிக்குச் சென்று, மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை டைப் செய்து தேர்வு முடிவுகளைப் பெறலாம்

Rddr786:ஜெயித்தது யார், ஒபாமாவா ? ஒசாமாவா?


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 

மௌலானா ஷம்சுதீன் காஸிமி அவர்களின் ஜும்மா குத்பா
தலைப்பு - ஜெயித்தது யார், ஒபாமாவா ? ஒசாமாவா? 
நாள் - 06.05.2011Is now available @ www.makkamasjid.com


மற்றும்..
  • ஒசாமா பின் லேடன் (ரஹ்) அவர்களுக்காக செய்யப்பட ஜனாசா தொழுகை
  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
  • செய்தித்தாள் செய்திகள்

Tuesday, May 03, 2011

Rddr786:கிரிடிட் கார்டும், அதன் விளைவுகளும்

முஸ்தபா எப்பொழுதும் போல் மிகவும் பரபரப்புடன் விறுவிறுப்பாக தனது அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் வெளிநாட்டில் ஒரு தனியார் அலுவலகத்தில் துணை கணக்காளராக வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் எந்த வித திட்டமிடுதலும் இல்லாமல் போற போக்கில் வாழ்கையை வாழுகிற பழக்கத்தை கொண்டவன். நாளைக்கு தேவையைக் கூட இன்று ஏற்ப்பாடு செய்ய திட்டமிடதாதவன், நாளைக்கு பார்த்துக்கலாம் என்று எப்பொழுதும் அலட்சிய போக்கைக் கொண்டவன்.
முஸ்தபா வீட்டிற்கு ஒரே பையன், அவன் உடன் பிறந்தவர்கள் மூன்று தங்கைகள் மட்டுமே. அவன் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அவனின் மனதில் பல வண்ண எண்ண அலைகள் ஓடிக் கொண்டு இருந்தது. அதில் ஒரு வண்ணமாக தங்கையின் படிப்பிற்காக பணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் தாயின் வேண்டுகோள், இரண்டாவது வண்ணமாக இன்றைக்கோ நாளைக்கோ என்ற நிலைமையில் பிரசவத்திற்காக தவித்துக் கொண்டிருக்கும் மனைவியின் தவிப்பு, மற்றொரு வண்ணமாக தினமும் நச்சரித்துக் கொண்டிருக்கும் உற்ற நண்பனின் நச்சரிப்பு, “என்னடா கடன் வாங்கி எத்தனை மாசம் ஆகுது, எனக்கும் பொறுப்பு, குடும்பம் எல்லாம் இருக்கு” என்று தினமும் வீட்டு அழைப்பு மணியை அடிக்கும் நண்பன், இத்தனையும் யோசித்துக் கொண்டே அலுவலகத்தை அடைந்தான் முஸ்தபா.
இருக்கையில் அமர்ந்த முஸ்தபாவிற்கு அருகில் உள்ள தொலைபேசி “ட்ரிங் ட்ரிங்” என்று நச்சரித்தது. தொலைபேசியில் மேலாளர் என்ன முஸ்தபா அந்த கிருஷ்ணனோட கணக்கு என்னாச்சுனு, இதோ அரை மணி நேரத்தில் ரெடி செய்து கொண்டு வர்ரேன் சார் என்று தொலைபேசியை வைக்கும் பொழுதே மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான், என்னோட கணக்கப் பார்க்கவே இந்த கணக்காளருக்கு நேரம் இல்லையாம் இதுல எங்க கிருஷ்னனோட கணக்கப் பார்க்குறது என்று.
சிறிது நேரம் கழித்து அலுவலக உதவியாளர் வந்து முஸ்தபா சார் உங்களப் பார்க்க டிப் டாப்பாக ஒருவர் வந்து இருக்கிறார். எதோ வங்கியிலுருந்து வந்து இருப்பதாக கூறுகிறார் எனற தகவலை தந்த அவனுக்கு, முஸ்தபா சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி வரச் சொல்லு என்று பதில் உரைத்தான்.
மிகவும் இளமையான ஒரு வாலிபன் முஸ்தபாவின் முன் வந்து நின்று குட் மார்னிங் சார் என்றான். பதில் உரைத்த முஸ்தபா யாரு நீங்க, எந்த வங்கியில் இருந்து வந்து இருக்கீங்க என்று வினவினான். அதற்க்கு அவன் சார் என்னை தெரியலையா, நான் உங்ககிட்ட பல முறை தொலைபேசியில பேசி இருக்கேன், இப்போ தான் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் வந்து இருக்கு, என் பேரு அந்தோணி என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டான். சிறிது நேரம் கொசுவர்த்திச் சுருளை பின்னே ஓடவிட்டு யோசித்த முஸ்தபா ஓ….. அந்தோணி நீங்களா, இந்த கிரெடிட் கார்டு வாங்கிக்கச் சொல்லி எப்பொழுது தொலைபேசியில் அலைப்பீர்களே என்று கேட்டுவிட்டு, என்ன சார் தொலைப்பேசியில் உங்க குரல் மிகவும் பழமை வாய்ந்ததாக தெரிந்தது, நேரில் மிகவும் இளமை வாய்ந்தவரா இருக்கீங்களே என்று எல்லாருடனும் சகஜமாக பேசுவது போல் வந்து இருப்பது மனித உருவில் உள்ள சைத்தான் என்றறியாமல் எல்லோருடனும் பேசுவது போல் மிகவும் சகஜமாக பேசினான் முஸ்தபா.
உடனே அந்தோணி அவருடைய வேலையை செய்ய வேண்டும் அல்லவா, அப்பொழுது பேச ஆரம்பித்த அந்தோணி முஸ்தபாவின் பதில் வரும் வரை விடவில்லை. சார், எங்க வங்கியில கிரிடிட் கார்டு எடுத்தீங்கன்னா மற்ற வங்கியை விட மிகவும் குறைவான சதவிகிதத்தில் மட்டுமே வட்டி இடுகிறோம், உங்க அவசரத்துக்கு யாரிடமும் கை ஏந்த வேண்டியதில்லை, எந்தவித முதலீடும் இல்லாம இந்த காலத்துல யாரு சார் பணம் தருவாங்க, நம்ம நண்பர்கள் கூட நம்மள நம்புறது இல்ல பண விஷயத்துல என்ற அவன் வார்த்தையை கேட்டதும் முஸ்தபா என்ன இன்னைக்கு நம்ம நண்பன் திட்டினது ஒட்டு கேட்டதுபோல் பேசுகிறாரே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நீங்க எங்கப் போனாலும் பணத்தை ரெடி செய்துக்  கொண்டு போக வேண்டிய அவசியம் ஏற்படாது. உங்களுக்கு இத்தனை ஆயிரம் லிமிட் தருகிறோம், அப்படி இப்படி என்று மிகவும் கனிவாகவும், அன்பாகவும் பேசியதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த முஸ்தபா, நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் எங்கள் மத சட்டப்படி வட்டி வாங்குவது, தருவதும் தடுக்கப்பட்ட ஒன்று சார் என்று பதில் சொன்ன முஸ்தபாவுக்கு அவனும் ஒரு பதில் வைத்து இருந்தான். சார் நீங்க எதற்க்காக வட்டி கட்டனும், ஒரு முறை நீங்க எதோ அவசரத்துக்காக கார்ட பயன்படுத்துறீங்கனு வைத்துக் கொள்வோம், அத நீங்க உங்க சம்பளம் வந்தவுடனேயோ அல்லது வரவேண்டிய இடத்துல இருந்து பணம் வந்துவிட்டாலோ நீங்க உடனே திருப்பி செலுத்தி விட்டீங்கன்னா உங்களுக்கு எந்த வட்டியும் இல்ல சார். உங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல 45 நாள் டைம் இருக்கு சார். நீங்க என்ன விளையாட்டுக்கோ அல்லது அனவசியாமா பயன்படுத்தினா தான் இறைவன் கூட தண்டிப்பார். உங்க அவசரத்துக்கு தானே சார் பயன்படுத்த போறீங்க என்று பி.ஹெச்.டி  படித்ததுப் போல் சரமாரியாக பேசிக்கொண்டு இருந்தான் அந்தோணி.
முஸ்தபா சரிங்க சார் ஒரு விண்ணப்பத்தைக் கொடுங்க நான் எழுதிக் கொடுக்கிறேன், நாம கட்டுப்பாட பயன்படுத்தினா எதுக்கு பிரச்சினை வரப்போகுது என்று அவனுக்கு அவனே ஆறுதல் கூறிக் கொண்டு அந்தோணி இத்தனை நேரம் பேசியதால் அவனுடைய பேச்சு திறமை இவனுக்கு வந்து விட்டது போல் பேசிக்கொண்டே விண்ணப்பத்தை எழுதிக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டிய அந்தோணி சார் ரொம்ப நன்றி, கார்டு நீங்க இருக்க இடத்தை தேடி உங்க கைக்கு வரும் என்று நம்ம வந்த வேலை முடிந்தது என்று சந்தோஷத்துடன் கிளம்பினான். அடுத்த 20 நாட்களில் அந்தோணி சொல்லியது போல் கிரிடிட் கார்டும் கைக்கு எட்டியது.
அன்று இரவு வீட்டை அடைந்தவுடன், அவனுடைய கடன் அனைத்தையும் கணக்குப்போட்ட கணக்குப் பிள்ளை முஸ்தபாவுக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவு இருந்தது. என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டு இருந்தான். எப்படியாவது அம்மாக்கிட்ட பேசி அங்க இருக்க அந்த நிலத்த வித்து எல்லாக் கடனையும் அடைச்சு, தங்கையையும் படிக்க வச்சுடுலாம்னு தன்னை தானே தேத்திக் கொண்டான்.
இப்படியே குழப்பத்தில் இரண்டு, மூன்று நாட்கள் ஓடியது. அவனுடைய அம்மாவிடம் இருந்து தொலைபேசி வந்தது, “என்னப்பா தங்கை படிப்புக்காக பணம் கேட்டேனே என்னாச்சுனு, உடனே தொலைபேசியை அம்மாவின் கையில் இருந்து பிடுங்கி பேசிய தங்கை “என்ன அண்ணா நான் என்ன கேட்டாலும் செய்வேன் சொன்னியே இப்போ மேல் படிப்பு சேருவதற்காக கேட்கிறேன் சீக்கிரமா பணம் அனுப்பு, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு” என்று அன்பு தங்கையின் கொஞ்சல்.
ஏற்கனவே இரண்டு தங்கையை மேல் படிப்பு வரை படிக்க வைத்த தாய்,  பரீட்சை முடிவு வரும் முன்னே கல்யாணம் செய்து கொடுத்தார்கள். தங்கைகளின் படிப்புக்காகவும், அவர்களின் கல்யாணத்திற்காகவும் தன்னை அறிந்த தெரிந்த அனைவரிடமும் தன் வரவை மறந்து வரவுக்கு மேல் கடன் இருக்கும் அளவுக்கு, தான் வாங்கிய கடனே அவனது கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கும் முஸ்தபாவுக்கு என்ன செய்வது என்றறியாமல் குழம்பி போய் இருந்தான்.
அம்மாவிடம் பதில் உரைத்த முஸ்தபா இங்க கடன் தொல்லை, கொஞ்சம் கஷ்டமா இருக்கு, வாங்கின வட்டிக்கு தான் வாங்கணும், அங்க எதாவது ஏற்ப்பாடு பண்ண முடியாதா, அந்த நிலத்த…. என்று இழுத்த அவனுக்கு வந்த பதில், இங்க நான் என்ற பண்றது, யார்கிட்ட போய் கேட்கிறது, அந்த நிலத்த எல்லாம் இப்போ விற்க முடியாது, அது உன் தங்கை கல்யாணத்துக்கு வேண்டும், பெத்த பிள்ளையா  உன்னால இதக் கூட செய்ய முடியாதா? உன் தங்கையின் மீது நீ வச்சு இருக்கும் பாசம் இவ்வளவு தானா என்று மிகவும் கோபத்துடன், அவன் மீது உள்ள கடன் சுமையை மறந்த அம்மா அவன் “வட்டிக்கு தான் வாங்கணும்” என்று சொன்ன வார்த்தையைக் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் சட்டென்று தொலைபேசியை துண்டித்தார்கள்.
முஸ்தபா என்ன பண்ணலாம், நம்மள நல்ல புரிஞ்ச ஹனிபாகிட்ட போய் உதவி கேட்கலாமா, இல்ல அலுவலகத்துல லோன் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த அவனுக்கு அவனது ஆழ் மனதின் இருக்கையில் உட்கார்ந்து இருக்கும் சைத்தான். அவனது எண்ண அலைகளை தூண்டி விடுகிறான். வேணாம் ஏற்கனவே ஒரு நண்பனிடம் நமது மானம் போய் விட்டது, அலுவலத்துல வாங்கின மாசம் மாசம் புடிச்சுப்பாங்க,  அப்பறம் எப்படி வீட்டுக்கு அனுப்புறது, மற்றக் கடனை அடைப்பது என்று அவனது எண்ணத்தை திருப்பி விடுகிறான், வேற வழியே இல்லை கிரிடிட் கார்டுல பணம் எடுத்து தங்கை படிப்பு செலவுக்கு அனுப்ப வேண்டியது தான் என்று கொஞ்சம் கொஞ்சமாக முஸ்தபாவின் மனதை சைத்தான் தன வழியில் மாத்திக் கொண்டு இருந்தான். நம்முடன் எப்பொழுதும் நம் வலப்புறத்தில் இருக்கும் தீயவற்றியிலுருந்து தடுக்கும் மலக்குமார்கள் அவனை சைத்தானின் கெட்ட தூண்டுதலில் இருந்து தடுக்க முயற்சிக்கிறார்கள் “நேத்து தானே  ஹதீஸ்ல படிச்ச, வட்டி வாங்குவதும், கொடுப்பதும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டக் காரியம், அதில் ஈடுபடுபவர்களுக்கு கொடிய நெருப்பினால் ஆன நரகம் உண்டு என்று”, ஆனால் நம்மை எப்பொழுது அல்லாஹ்விற்கு எதிரே செயல் படத் தூண்டும் சைத்தான் சொல்கிறான் “வட்டி வாங்குறது தானே குற்றம், நாம அந்தோணி சொன்னது போல் அடுத்த மாசம் சம்பளத்துல மத்த செலவுகள குறைத்துக் கொண்டு கட்டிடலாம்” என்று. ஒரு வழியாக சைத்தான் முஸ்தபாவை அவன் பக்கம் இழுத்தான்.
மறுநாள் காலையில் ஒரு வித மனக் குழப்பத்துடன் கிரெடிட் கார்டுல பணத்தை எடுத்து அனுப்பினான் முஸ்தபா. எப்பொழுதும் எதற்காகவும் திட்டமிடாத முஸ்தபா கிரிடிட் கார்ட எப்படியாவது வட்டி இல்லாமல் கட்டிடனும்னு ரொம்ப திட்டமிட்டுக் கொண்டு இருந்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் மனைவியின் அழைப்பு “என்னங்க டாக்டர் மருத்துவமனையில சேர சொல்லிட்டாங்க இன்னிக்கோ நாளைக்கோ குழந்தை பொறந்துடும்னு சொல்லி இருக்காங்க, நீங்க இன்னும் பணம் அனுப்பலையே என்று” தான் அப்பாவாக போவதை எண்ணி அவனால் சந்தோசம் கூட பட முடியாத நிலை, ஓகே நீ கவலைப்படாம இரு, நான் எப்படியாவது நாளைக்குள்ள பணத்த அனுப்பி விடுகிறேன் என்று தனது மனைவிக்கு ஆறுதல் சொன்னான். அப்பவே மனைவி சொன்ன, கருத்தரித்த நாள் முதல் இன்று வரை, ஏற்கனவே உங்களுக்கு நிறைய கடன் சுமை இருக்கு, அதனால இப்பவே கொஞ்சமா கொஞ்சமா பிரசவத்துக்கு தேவையான செலவ சேர்த்து வைங்க இல்லேன்னா கடைசி நிமிஷத்துல கழுத்தை நெரிக்கும்னு, நான் தான் அலட்சியமா அத அப்போ பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன் என்று புலம்பிக் கொண்டான். வேறு வழியே இல்ல கார்டுல தான் எடுத்தாகனும், யோசிக்க நேரம் இல்லன்னு ஏற்கனவே தங்கை படிப்புக்காக பயன்படுத்திய தவணையை கட்டி முடிக்கும் முன்பே இதற்க்காகவும் பயன்படுத்தினான்.
சொற்ப சம்பளத்தில் வேலைப் பார்க்கும் முஸ்தபாவுக்கு எங்கிருந்து முழு பணத்தையும் ஒரு மாதத்தில் வட்டி இல்லமால் கட்டுவது. நாட்கள் கடந்தன, வட்டியும்  முதலும் அதிகரித்துக் கொண்டே போனது. சில மாதங்கள் தவணையை சரியாக கட்டிய முஸ்தபா அவனுடைய மற்ற கடனின் தொல்லையால் கட்டாமல் விடவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டான். முதன் முதலில் தொலைபேசியில் அழைத்து மிகவும் அன்பாகவும் கனிவாகவும் பேசிய அந்தோணி தொலைபேசியில் முஸ்தபாவை அழைக்க ஆரம்பித்தான். சார் என்னாச்சு இந்த மாசம் தவணை கட்டல, அந்த மாசம் தவணை கட்டல என்று நச்சரிக்க ஆரம்பித்தான்.
பல மாதங்கள் வருடமாகியது, அந்தோணி தொலைபேசியில் மிகவும் கடிந்த வார்த்தைகளில் பேசினான், இப்படியே போனா உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்னு. அவன் முதன் முதலில் அவனை நேரில் கண்டு பேசிய கனிவான, அன்பான  வார்த்தைகளை எண்ணிப் பார்த்தான். முஸ்தபாவுக்கு கண்ணீர் மல்கியது. இது தான் உலகம், அன்றைக்கு அப்படி பேசிய மனிதர் இன்றைக்கு இப்படி மாறிவிட்டாரே என்று. நம்மளையும், நம்ம சூழ்நிலையையும் அறிந்த பெற்றோரும், உடன் பிறந்தவர்களுமே சில நேரம்  பணத்திற்காக வெறுத்து ஒதுக்கி பேசுகிறார்கள். இவர் யாரோ தானே, குற்றம் நம் மீது தான். யோசிக்காமல் செய்த காரியத்துக்கு கிடைத்த பலன் இது என்று, தன்னை தானே வருந்திக் கொண்டான்.
மறுபடியும் அந்தோணி முஸ்தபாவை தொலைபேசியில் அழைக்கிறான், சார் இது தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, சீக்கிரமா உங்க கடனை அடைக்க முயற்ச்சி பண்ணுங்க, நீங்க எங்கயும் தப்பிக்க முடியாது. நீங்க இங்க இருந்து உங்க நாட்டுக்கு போகனும்னு முயற்சி செய்தாலும் விமான நிலையத்துலையே உங்கள புடிக்கிற அளவுக்கு எங்க மேலிடத்தில் முயற்ச்சி எடுத்து இருக்காங்க. இத முழுசா அடைக்காம நீங்க எங்கயும் போக முடியாதுனு எச்சரிக்கை விடுத்து தொலைபேசியை துண்டித்தான்.
படிப்பை முடித்து கல்யாணத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும் தங்கைக்கு என்ன செய்வது, பெற்ற பிள்ளையின் முகத்தை வெறும் புகைப்படத்தில் மட்டும் பார்த்தும், தொலைபேசியில் குரலை கேட்டும் ஆறுதல் அடைந்து கொண்டு இருக்கும் முஸ்தபா தான் மனைவி மக்களை எப்படி காணுவது.
இப்படிப் பட்ட சூழ்நிலைக்கு எதுக் காரணம்.
1.நம்மை புரிந்து நமக்கு உதவி புரியாத குடும்பமா?
2.திட்டமிடாத வாழ்க்கையா?
3.அல்லாஹ்வையும் மறுமையையும் மற்றும் நபி மொழியையும் மறந்து இவ்வுலக வாழ்க்கையில் உள்ள குடும்பத்திற்காக தம்மை இணைத்துக் கொண்டதா?
இப்படி எத்தனையோ சகோதரர்கள் தங்கள் குடும்பத்திற்காக தங்களை அடுத்த நாட்டில் அடகு வைத்து கொண்டு இருக்கிறார்கள். அதில் இருந்து தப்பித்து சரியான வழியில் செல்லும் ஒருவராக நீங்கள் இருந்தால் முஸ்தபா போன்ற ஆட்களுக்கும், குடும்பத்திற்கும் நீங்கள் கூறும் அறிவுரை என்ன? நீங்கள் கூறும் அறிவுரை இனி வளரும் தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். 
thanks:-thoothuonline