பதிவு செய்த நாள் : மே 29,2011,23:56 IST
காட்டுமன்னார்கோவில் அருகே வீடு புகுந்து தாக்கி கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை காங்கிருப்பு பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜியாவுதீன். இவர் லால்பேட்டை கைகாட்டியில் டீக் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து பூரோவை உடைத்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். மேலும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜியாவுதீன் மனைவியின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தாலிச் செயினையும் அறுத்தனர். உடன் அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முகமது ரபிக் ஓடி வந்த போது, அவரை கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு மோப்பநா# மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து தாக்கி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=248723
http://www.dinamalar.com/district_detail.asp?id=248723
0 comments:
Post a Comment