அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Wednesday, June 29, 2011

இளம்பெண்களே! வாழ்க்கையில் தடம் புரளாதீர்கள்!

 செல்ஃபோன்; இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது.
விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.]  

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும்? என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூஷன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர், ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.


இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள், மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள், மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.
பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர்கள், "இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் கேட்கும் திறன்’ பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பலபேர் கலந்துகொண்ட ஆய்வின் முடிவில், ஐபாட் போன்றவற்றில் தொடர்ந்து பாடல்கள் கேட்பதால், இளைஞர்களை விட இளம்பெண்கள் வெகுவிரைவாக கேட்கும் திறனை இழந்துவிடுவதாக தெரிந்துள்ளது
ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் எலிசபெத் ஹெண்டர்சென் இதுகுறித்து கூறியதாவது: ஆய்வில் பங்குபெற்ற அனைவருக்கும் கேட்கும் திறன் பற்றிய சோதனை நடத்தப்பட்டது. அதில், இளைஞர்களை விட, 17 சதவீத அளவிலான இளம்பெண்களுக்கு கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதுதான் கேட்கும் திறன் குறைவதற்கு காரணம் என தெரிந்தது.
கடந்த 1980ம் ஆண்டுகளில் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்பது என்பது 20 சதவீதமாக இருந்தது. 1990களில் இன்னும் அதிகரித்து 35 சதவீதமானது. இப்போது, செல்போன், ஐபாட், டிராய்ட், பிளாக்பெர்ரி என விதவிதமான சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர் 24 மணிநேரமும் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்டபடியே உள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும் பாதிப்புகள் நிச்சயம் என்றாலும், இளம்பெண்கள் தான் வெகுவிரைவில் காதுகேட்கும் திறனை இழக்கின்றனர். இவ்வாறு எலிசபெத் ஹெண்டர்சென் கூறினார்.


காது கேட்கும் திறனை இழப்பதுமட்டுமின்றி அன்னிய ஆடவர்களின் செல்ஃபோன் தொடர்பினால் சட்டவிரோதக் கருக்கலைப்பிற்கு இட்டுச் செல்கின்ற காதல்கள் இன்று சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. மறுபுறத்தில் இளவயது விவாகரத்துக்கள் பெருகிவருவதாக சமுதாய அனுதாபிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


கீழுள்ள திருக்குர்ஆனின் போதனையை செவிமடுங்கள்;

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

இன்றைய நவநாகரீக இளம்பெண்கள் ஆடை அலங்காரங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை அள்ளி விடுகிறார்கள். அதே போல் வாசனை திரவியங்கள், சோப்பு போன்றவற்றுக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள். வெளி பகட்டுக்காக பணத்தை தண்ணீராய் செலவழிக்கிறார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

http://www.nidur.info

 

Monday, June 27, 2011

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை; சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர், ஜூன் 24: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு சிறுபான்மை இன மாணவ, மாணவியர் (கிறிஸ்தவர், இஸ்லாமியர், பெüத்தர், சீக்கியர், பாரசீக மதத்தினர்) விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஆட்சியரின் செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11, 12-ம் வகுப்புகள், வாழ்க்கைத் தொழில் கல்வி, ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக், நர்சிங் டிப்ளமோ, ஆசிரியர் பட்டயப் பயிற்சி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு (எம்.பி.ஏ., எம்.சி.ஏ நீங்கலாக) பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர், இஸ்க்ப் உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட கல்வி நிலையங்கள், தகுதி உள்ள மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி உதவித் தொகை பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் 50 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குக் குறையாமல் இருக்கவேண்டும். வேறு கல்வி உதவித் தொகை பெற்று இருக்கக் கூடாது. குடும்பத்தில் இருவருக்கு மட்டும் உவித் தொகை வழங்கப்படும்.
11-ம், 12-ம் வகுப்பு மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 4-7-2011 க்குள்ளும், புதிய வின்ணப்பங்களை 11-7-2011 க்குள்ளும், பிற மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 30-6-2011 க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 15-7-2011 க்குள்ளும் தங்கள் கல்வி நிலையங்களில் அளிக்கவேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Friday, June 17, 2011

Rddr786: ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம்


 காட்டுமன்னார்கோவிலில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளதாக ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் தெரிவித்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலத்தில் ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துவக்க விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் தாளாளர் பழனி, வீராசாமி, நடராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் மணிரத்தினம் தேசியகொடியேற்றி பள்ளியை திறந்து வைத்து பேசியதாவது: ஏழை மாணவர்கள் முழு கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக பின்தங்கிய இப்பகுதியில் ராஜிவ்காந்தி பெயரில் பள்ளி துவக்கப்பட்டுள்ளது. தற்போது 2,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதி வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்பகுதி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக வரும் 2012ம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்படும். இவ்வாறு தாளாளர் மணிரத்தினம் பேசினார்.

Thursday, June 09, 2011

Rddr786:முட்டம் பாலம் கட்டும் பணி...தீவிரம்

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் நாகை - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் 48 கோடி ரூபாயில் கட்டப்படும் முட்டம் பாலம் பணி இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் பகுதியில் கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 48 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இரு மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், வியாபார ரீதியாக இரு மாவட்ட பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் இப்பாலம் கட்டப்படுகிறது. பாலம் பணி முடிவடைந்தால் நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு பிரதான சாலையாகிவிடும். சென்னையில் இருந்து நாகை மாவட்டத்திற்குச் செல்பவர்கள் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், முட்டம், பட்டவர்த்தி, வில்லியநல்லூர், நீடூர், மயிலாடுதுறை சென்று விடலாம். அதேப்போன்று காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள கிராம மக்கள் மயிலாடுதுறை செல்வதற்கு சிதம்பரம் வந்து சீர்காழி வழியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாகை கொள்ளிடக்கரை கிராம மக்களும் 70 கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டிய நிலை தவிர்க்கப்படும். இதனால் 2.30 மணி நேரம் செல்ல வேண்டியது ஒரு மணி நேரம் மிச்சமாகி விடும். முட்டம் பாலம் கட்ட வேண்டும் என 1974ம் ஆண்டு அப்போதைய காட்டுமன்னார்கோவில் சேர்மனும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சியால் பாலம் கொண்டு வரப்பட்டது. நபார்டு உதவியுடன் தமிழக அரசு 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி துவக்கியுள்ளது. நிலம் ஆர்ஜித பணிகள் முடிந்து கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி பணி துவங்கியது. துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாலம் கட்ட ஒன்றரை ஆண்டுகள் திட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அது 12 மாதமாக குறைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெய்த மழை, கொள்ளிடத்தில் வெள்ளம் என இயற்கை இடர்பாடுகளால் பாலம் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. 5 மாதங்கள் பணிகள் நடைபெறாமல் போனதால் பணிகள் முடித்திருக்க வேண்டிய நிலையில் 50 சதவீத பணிகள்தான் முடிந்துள்ளது. பாலத்திற்கு 36 பில்லர்கள் அமைக்கும் பணி முடிவடைந்து அதன்மேல் தளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பணிகள் முடிய மேலும் அவகாசம் தேவை என்பதால் வரும் 2012 ஜூலை மாதம் பணி முழுமை பெற்று விடும் என தெரிகிறது. அதையொட்டி பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது.

Thursday, June 02, 2011

Rddr786:படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்!

டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவைகளில் தலித் இன மக்களை விட தாழ்ந்து இருக்கிறார்கள் என நீதிபதிகள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் சொல்கின்றன. ஆனால் நம்மிடையே அறிவுசால் இளைஞர்கள், மாணவர்கள் இல்லையா?! என்றால் இருக்கிறார்கள். அவர்களுக்க உதவ சமுதாய இயக்கங்கள் தயாரா என்ற கேள்வியினை எழுப்புகின்றார் ஒரு பள்ளி மாணவர்.
    27.5.2011 அன்று பத்தாம் வகுப்பு மாணவர் தேர்வு முடிவுகள் வெளியாயின. என்ன ஆச்சரியம் அதில் ஒரு முஸ்லிம் மாணவர் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் வாங்கியுள்ளார். அவர் படம் 28.5.2011 பத்திரிக்கையில் வந்தன. நீங்களெல்லாம் நினைத்திருப்பீர்கள் அவர் மாநகரமான சென்னையிலே அல்லது மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற வசதியும், வாய்ப்பும் உள்ள நகரிலிருந்தோ, மிகவும் தரம் வாய்ந்த படிப்பினைத் தரும் பள்ளியிலிருந்தோ, மற்றும் பணத்தினை அள்ளி தெளித்து டூயுசன் வைத்து படித்த மாணவராக இருக்குமென்று.
    ஆனால் அந்த மாணவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாத்தினையும், ஈமானையும் கட்டியாக பிடித்திருக்கும் மேலைப்பாளைய நகரைச் சார்ந்தவர் என்று நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் இனித்தது. ஏன் தெரியுமா? மேலைப்பாளையத்தில் சாதாரண பீடி சுத்தும் கம்பெனியில் மாதம் ரூ 4000 வருமானத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மூத்த மகன் தான் அந்த மாணவர். தன் தந்தையின் நான்கு பிள்ளைகளில் மூத்த மகனான, மறைந்த ஈராக் அதிபர் மாவீரன் சதாம் ஹூசைனின் பெயரினைத் தாங்கியவர் படித்த பள்ளி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியாகும்.  தன் குடும்பமே எதிர்பார்க்காத நிலையில் அவர் மாநிலத்தில் மொத்த 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தினை தட்டிச் சென்றுள்ளார்.
    தந்தை அப்துல் ரஹ்மான் தன் மகவினை கையைக் கட்டி, வாயைக் கட்டி மாநிலத்தில் சிறந்த மாணவனாக ஆக்கியதால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றிருப்பார் என நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போது, ‘தன் மகன் வெற்றி பெற்றதிற்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் தான் முக்கியம். மேல் படிப்பினை படித்து மெக்கானிக்கல் இன்ஜீரியங் ஆக வேண்டும். என சதாம் விரும்புகிறான். எனக்கு மேலும் மூன்று பிள்ளைகள் இருப்பதால் அவனை எப்படி இன்ஜினீரியங் படிப்பிற்கு படிக்க வைப்பது எனத் தெரியவில்லை என்று கவலையாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
    ஏன் இல்லை என்று  சொல்லும் அளவிற்கு நமது சமுதாய இயக்கங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவது கண்கூடானது. உதாரணத்திற்கு, 1) மைத்திற்கு ஜனாஸா ஐஸ் பெட்டிகள், 2) அவசர சிகிச்சைகளுக்கு ஆம்புலன்ஸ், 3) அறுவை சிகிச்சைக்களுக்குத் தேவைப்படும் ரத்ததானம்,4) ஏழைக் குமருகளுக்கு திருமண செலவுகள் ஏற்றல், 5) சுயவேலைகள் செய்வதிற்கு பொருளாதார உதவி, 6) வயதானவர்களுக்கு பொருளாதார உதவி போன்ற சேவைகளினை செய்து மக்களின் பாராட்டுதலை செய்கின்றனர.
    ஆகவே நமது சமுதாய இயக்கங்கள் ஸதாம் ஹூசைன் பேன்ற சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவியிரினை அடையாளம் கண்டு அவர்களை தத்தெடுத்து அவர்கள் மேல் படிப்பிற்க்கு உதவுவதுடன் அவர்களுக்கு அரசு மானியமும் கிடைக்க வழிவகை செய்யதால் கூலித்தொழிலாளி அப்துல் ரஹ்மான் போன்ற ஏழைப் பெற்றோர் குடும்பத்தில் உள்ளவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் என்றால் மிகையாகுமா தோழர்களே

Wednesday, June 01, 2011

Rddr786:லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இலவச ஆட்டோ சேவையையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அவசர உதவிக்காக இலவச ஆட்டோ சேவை துவங்கப்பட்டது. வயதானவர்கள், பிரசவத்திற்கும் செல்பவர்கள் மற்றும் அவசர உதவிக்காக இரண்டு ஆட்டோக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமையில் இலவச ஆட்டோ சேவையை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.