அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Friday, June 17, 2011

Rddr786: ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம்


 காட்டுமன்னார்கோவிலில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளதாக ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் தெரிவித்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலத்தில் ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துவக்க விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் தாளாளர் பழனி, வீராசாமி, நடராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் மணிரத்தினம் தேசியகொடியேற்றி பள்ளியை திறந்து வைத்து பேசியதாவது: ஏழை மாணவர்கள் முழு கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக பின்தங்கிய இப்பகுதியில் ராஜிவ்காந்தி பெயரில் பள்ளி துவக்கப்பட்டுள்ளது. தற்போது 2,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதி வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்பகுதி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக வரும் 2012ம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்படும். இவ்வாறு தாளாளர் மணிரத்தினம் பேசினார்.

0 comments: