காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30). இவர் தச்சுதொழிலாளி (ஆசாரி). இவர் நேற்று ரெட்டியூரில் இருந்து கண்டமங்கலம் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மினிலாரி கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.