காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30). இவர் தச்சுதொழிலாளி (ஆசாரி). இவர் நேற்று ரெட்டியூரில் இருந்து கண்டமங்கலம் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மினிலாரி கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
போலீசார் விசாரணை
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கண்ணனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து விபத்தில் பலியான கண்ணனின் நண்பர் பத்மநாபன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment