அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, January 30, 2011

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசியலீக் அறிவிப்பு

சென்னை :ஜன,29
  
 
.
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.
.
கிழக்கு தாம்பரம், கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலர் ஹைதர் அலி, ம.ம.க., பொதுச்செயலர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.
கூட்டத்தில், தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது; ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவது; வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகம் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.
கூட்டத்தின் நிறைவில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி:
.
விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் பலம் வாய்ந்துள்ள எங்கள் கட்சிக்கு கணிசமான அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். அதற்கான பணிகளில் தொண்டர்கள் நாளை (இன்று) முதலே ஈடுபடுவார்கள்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

.

இந்திய தேசிய லீக் 







Thanks : http://lalpet.com/?p=1230

0 comments: