அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Friday, April 25, 2014

மக்கள் மருத்துவர் சம்பத் காலமானார்...

காட்டுமன்னார்குடியில் இரண்டு தலைமுறைகளுக்கு மருத்துவ சேவை செய்து வந்த மருத்துவர் சம்பத் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காட்டுமன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களில் இவரிடம் வைத்தியம் பார்க்காத யாரும் இருக்கவே முடியாது.

மருத்துவர் சம்பத் அவர்கள் வைணவ பிராமண சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் காட்டுமன்னார்குடியில் பெருமளவு வசிக்கக் கூடிய பிற்படுத்தப் பட்ட,தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமியர்கள் தான் அவரிடம் அதிக அளவில் வந்து வைத்தியம் பார்த்து செல்வார்கள்.

பிராமணர்கள் மற்ற சாதியினரை தொட மாட்டார்கள் என்றொரு பேச்சு இருக்கிறது.ஆயினும் மற்றவர்களால் கீழ் சாதியினர் என்று கருதப்படும் மக்களை தொட்டு வைத்தியம் பார்த்த நல்ல மனிதர் தான் சம்பத் அவர்கள்.

அவரது மறைவு காட்டுமன்னார்குடி பகுதி வாழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையல்ல.

அவரை இழந்து வாடும் அவரது மகன் மருத்துவர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர்,மருத்துவமனை ஊழியர்களுக்கு எங்களது 

இரெட்டியூர் Express ...இணையதளத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.


Thanks to :http://kollumedu.com/dr-sambath-passes-away/

0 comments: