பாத்திமா முசப்பர் தனி அமைப்பு தொடங்குகிறார்
பாத்திமா முசப்பர் இப்தார் நிகழ்ச்சியில்
மானம் இழந்து முஸ்லிம் லீக் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டையும் திராவிட முன்னேற்ற கழகத்திடம் பறி கொடுத்து அவல நிலை அடைந்ததை தொடர்ந்து முஸ்லிம்லீகில் புரட்சி குரல்கள்
கேட்கத்தொடங்கி விட்டன.
இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் முஸ்லிம்லீகின்முன்னணி பிரமுகரும் காலம் சென்ற லீக் தலைவர் அப்துல் சமது அவர்களின் மகளுமான பாத்திமா முஸப்பர் தனது ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்லீகின் சமீபத்திய நடவடிக்கைகள் குறிப்பாக கடந்த சில நாட்களாக திமுக காங்கிரஸ் கூட்டணிதகராறில் முஸ்லிம் லீக் அப்பாவியாய் தண்ணீர் லாரியில் அடிபட்ட ஆட்டுக்குட்டி யாய் பரிதாப நிலை அடைந்தது அது
அங்குள்ள தன்மான சிந்தனையாளர்களுக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் வரவழைத்துள்ளது இதனை
தொடர்ந்து பாத்திமா முசப்பர் தனி
அமைப்பு
கண்டதாக பரப்பரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் மூத்த மார்க்க மேதைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன்
0 comments:
Post a Comment