அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, February 24, 2011

சில இடங்களில் வேலையும் உள்ளது முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் நாடினால் சிறந்ததை அடைந்து கொள்வீர்கள்

IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (டெப்டி கலெக்டர்), காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.


இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லீம் பட்டதாரிகள் பயன்பெரும் வகையில் தமிழகத்தில் 13 இடங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்விற்க்காக இலவச பயிற்சி நடத்த
படவிருப்பதாக ரேடியன்ட் அகாடமி தலைவர் ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புது கல்லூரியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் சென்னை எஸ்ஐஇடி பெண்கள் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, மதுரை வக்ப் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உட்பட தமிழக்த்தில் 13 இடங்களில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த இலவச பயிற்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ள ரேடியன்ட் அகாடமி ரஹ்மதுல்லாஹ் (9629309314) அவர்களை தொடர்பு கொள்ளாம்

0 comments: