அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர் ஜனாப் . M. அப்துல் சலாம் ( இக்பால் ) அவர்களின் மருமகனும் , ஜனாப் M .அக்பர் அலி அவர்களின் மாமானாரும் மற்றும் A .ஆரிப் தகப்பானர் ஆகிய ஆயங்குடி பள்ளிவாசல் தெரு சேர்ந்தவர் அபுல்ஹசன் அவர்கள் 6.03.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அவர்களின் ஜனாசா அல் -அய்ன் மருத்துவமனையில் உள்ளது ஓரிரு நாள்களில் மருத்துவமனை சம்பிரதாயங்கள் முடிந்தப்பிறகு அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அல் -அய்ன் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
1 comments:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்......
Post a Comment