முசாபர்நகர்:
திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் புகைப்படத்தை கொடுக்க தடை விதித்து இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் தடை விதித்து பத்வா வெளியிட்டுள்ளது.
இது குறித்து தாருல் உலூம் தியோபந்த் வெளியிட்டுள்ள பத்வாவில் கூறியிருப்பதாவது, திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் புகைப்படத்தை அளிப்பது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது.
முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி உண்டு. அதனால் பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அளிக்க தடை விதித்து பத்வா விடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாருக்கு இமெயிலில் புகைப்படத்தை அனுப்பலாமா என்று சந்தேகம் கேட்டுள்ளார். இதையடுத்து தான் பத்வா விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks:
0 comments:
Post a Comment