அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Wednesday, December 12, 2012

கடலூர் மாவட்ட ஷரீஅத் தீர்வு மன்றம் தொடக்கம்


லால்பேட்டை,டிச-11
கடலூர் மாவட்ட  ஷரீஅத் தீர்வு மன்றம் தொடக்க விழா லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முப்தி மௌலானா எஸ்.ஏ.அப்துல் ரப் ஹஜ்ரத் முன்னிலை வகித்தார் மௌலானா எஸ்.ஏ.சைபுல்லாஹ் ஹஜ்ரத் வரவேற்றுப் பேசினார்  விழாவில் சென்னை காஷிபுல் ஹூதா அரபுக்கல்லூரி பேராசியர்கள்  மௌலானா முஹம்மது இப்ராஹீம்,மௌலானா அபுல் ஹசன் ,மௌலானா  தளபதி ஷபிகுர்ரஹ்மான் ,அட்வகேட் ரியாஜுத்தின் ஆகியோர் முஸ்லிம்கள் சிவில் சம்மந்தமாக குடும்பவியல் பாகப்பிரிவினைக்காக காவல்துரை நீதி மன்றம் செல்லாமல் ஷரீஅத் தீர்வு மன்றம் மூலமாக முஸ்லிம் தனியார் சாட்டதின் அடிப்படையில் தீர்வுகான வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள் ஜாமியா பொருளாளர் எஸ்.எஸ்.ஜாபார் அலி நன்றி கூறினார்.
ஷரீஅத் தீர்வு மன்ற காஜியாக ஜாமியா முதல்வர் மௌலானா ஏ.நூருல்அமின் ஹஜ்ரத் ,ஆலோசகர்களாக
மௌலானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் முப்தி மௌலானா எஸ்.ஏ.அப்துல் ரப் ஹஜ்ரத்  மௌலானா எஸ்.ஏ.சைபுல்லாஹ் ஹஜ்ரத் , மௌலானா ஜாக்கிர் ஹுசைன் ஹஜ்ரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தின் அனைத்து ஊர் ஜமாஅத்களின் நிர்வாகிகள்,உலமாக்கள் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
News   : http://lalpet.net/?p=6783#more-6783

0 comments: