அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Friday, March 25, 2011

Rddr786:28ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மாவட்டத்தில் 33,669 பேர் பங்கேற்பு

கடலூர் : வரும் 28ம் தேதி துவங்கும் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு வரும் 28ம் தேதி முதல் துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 63 மையங்களில் 9,829 மாணவர்களும், 10 ஆயிரத்து 838 மாணவிகளும் மொத்தம் 20 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 1,009 மாணவிகள் மாணவர்களைவிட கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.அதேப்போன்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் 5,654 மாணவர்களும், 5,058 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 2,290 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்

0 comments: