இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. நிறுவனங்களில் பி.டெக். சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 10ந் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்வு இந்தியா முழுவதும் 130 நகரங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 4 லட்சத்து 95 லட்சம் மாணவ மாணவிகள் இந்ததேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். சென்னை மண்டலத்தில் மட்டும் 65ஆயிரத்து 650 பேர் எழுதுகிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 3 ஆயிரம் பேர் குறைவாகும்.
தமிழ்நாட்டில் இந்த தேர்வு சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் நடக்கிறது.
தேர்வு முடிவு மே மாதம் 25 ந்தேதி வெளியிடப்பட உள்ளது. எந்தபடிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஜுன் 27 ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
0 comments:
Post a Comment