ரவிக்குமார் MLA
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில் வி.சி., கட்சியில் சீட் கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் காங்., எம்.பி., யாக இருந்தவர் இளைபெருமாள். இவரது மகன் நந்தகோபால். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. மண்ணின் மைந்தரான நந்தகுமாருக்கு காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்க வேண்டும் என வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு கோரிக்கை வைத்து வீராணநல்லூர், கருணாகரநல்லூர், நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சியியே இந்தொகுதியில் போட்டியிடும் சூழ்நிலை உள்ளதால் மீண்டும் அதே வேட்பாளரான ரவிக்குமார் அறிவிக்கப்படலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பே போஸ்டர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 comments:
Namakku Yaru ninna enna nallathu saitha nallathuuuuuuuuuuuu
Post a Comment