சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பணியாற்றும் படகு இயக்கும் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிச்சாவரம் மையத்தில் 35 பேர் படகு இயக்கும் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். பிச்சாவரம் வனப்பகுதியில் தனியார் படகுகளை இயக்குவதால் தங்களது வருமானம் பாதிப்பதால் தனியார் படகுகளை இயக்கத் தடை விதிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, படகு இயக்கும் போது சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்கள், தனியார் படகுத் தொழிலாளர்களை தடுத்துள்ளனர்.
அப்போது தனியார் படகுத் தொழிலாளர்கள் சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சுற்றுலா மைய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி தலைமையில் படகுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை படகுகளை இயக்காமல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அங்கு சென்று சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனால் காலை 10 மணி முதல் 11 மணி வரை படகுகள் இயக்கப்படாததால் 1 மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, படகு இயக்கும் போது சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்கள், தனியார் படகுத் தொழிலாளர்களை தடுத்துள்ளனர்.
அப்போது தனியார் படகுத் தொழிலாளர்கள் சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சுற்றுலா மைய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி தலைமையில் படகுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை படகுகளை இயக்காமல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அங்கு சென்று சுற்றுலா மைய படகுத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனால் காலை 10 மணி முதல் 11 மணி வரை படகுகள் இயக்கப்படாததால் 1 மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர்.
0 comments:
Post a Comment