அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Friday, February 04, 2011

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் மமக குழுவினருடன் பேச்சுவார்த்தை




வரும் சட்டமன்றத் தேர்தலில் சகல துறைகளிலும் மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களால் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன்  ஆகியோரை கொண்ட அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலி, ஒ.யு. ரஹ்மதுல்லாஹ். ப. அப்துல் சமது, எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோரை உள்ளடக்கிய மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவினர் அதிமுக தலைமையகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிப வியுகங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது. சிறுபான்மை சமுதாயத்தின் கோரிக்கைகளும் அதிமுக குழுவினருடன் மமக தலைவர்க எடுத்துரைத்தார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி போ்ட்டியிட விரும்பும்  தொகுதிப் பட்டியல் அதிமுக குழுவினரிடம் வழங்கப்பட்டது. இது முதல் சுற்று பேச்சு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சு வார்த்தை முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அதிமுக குழுவினருடனான பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்ததாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெற் பாடுபடுவோம். பீகாரைப் போல் எதிர்கட்சியை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதிமுக கூட்டணி வெற்றிப் பெற் பாடுபடுவோம் என்று குறி்ப்பிட்டார்.

 

0 comments: