தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் மூலம் 7.30 லட்சம் பேரும், நேரடியாக 52 ஆயிரம் மாணவ, மாண விகளும் தேர்வு எழுது கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல், தேர்வு எண் ஆகிய விவரங்கள் அனைத்துப் பள்ளி களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் வரும் 3ம் தேதி பிளஸ் 2 செயல்முறை (பிராக்டிகல்) தேர்வு தொடங்குகிறது. பிப்ரவரி 23ம் தேதிக்குள் செயல்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் 4.52 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த செயல்முறைத் தேர்வில் கலந்து கொள்கின்றனர்.
இச்செயல்முறைத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் தரப்படுகிறது. இதைக் கண்காணிக்க அந்தந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவரும், வேறு பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு நடப்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயல்முறைத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் தரப்படுகிறது. இதைக் கண்காணிக்க அந்தந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவரும், வேறு பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு நடப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment