தில்லியில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் துப்பாக்கி சுடும் போட்டிகள் வழியாகக் கிடைத்துள்ளது.
அபினவ் பிந்திரா
ஆடவர் இரட்டையர் அணி பத்து மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு
துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்திரா
மற்றும் ககன் நரங் கொண்ட அணி 1193 புள்ளிகளைப் பெற்று
தங்கம் வென்றனர்.
இத்தனைப் புள்ளிகள் பெற்றது என்பது காமன்வெல்த் போட்டி
களில் ஒரு புதிய சாதனையும் ஆகும்.
கடந்த முறை மெல்பர்ன் நகரில் நடந்த காமன்வெல்த்
போட்டியில் 1189 புள்ளிகளோடு இவ்விருவரும்
ஏற்படுத்தியிருந்த சாதனையை இப்போது இவர்களே முறியடித்துள்ளனர்.
இம்முறை உலக சாதனையாளர் ககன் நரங் 598 புள்ளிகளும்,
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான அபினவ்
பிந்திரா 595 புள்ளிகளும் பெற்றும் தங்கள் அணியின் மொத்த புள்ளிகளை 1193ஆக உயர்த்தியிருந்தனர்.
இந்தப் பிரிவில் இங்கிலாந்து வீரர்கள் வெள்ளிப் பதக்கமும்
வங்கதேச அணியினர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment